வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

azhakoviyam162

அலையான  கூந்தல்  கருநீலமோ -உன்
 அழகான  கண்கள்  கவிபாடுமோ
 சிலையான  பொன்மேனி  கலைக்கூடமோ -நீ
 சிரிக்கின்ற  போதிலே முத்தாடுமோ

 வளைவான அங்கங்கள்  பந்தாடுமோ -அருகே
 வந்தாலே என்னுள்ளம்  பித்தாகுமோ
 குழைவான  அதரங்கள்  பழ்தோட்டமோ -உன்
 குலுங்கிடும் அழகு  ஒருசதிராட்டமோ

 வளையாடும்  கையோசை  வளையாபதி -நீயோ
 வந்தாலே  பெறலாமே  மனநிம்மதி
 கலையோடும்  கருவிழிகள்  மீந்தானடி -உனைக்
 கண்டாலே  இனிக்கின்ற  தேன்தானடி

 நிலவுக்கு குளிர்ச்சியே  நீதானடி -தினம்
 நினைத்தாலே  வருவது  மலர்ச்சிதானடி
 கலவிக்கு  வழிகாட்டும்  கண்ஜாடையே -நாளும்
 கலைவெள்ளம் வழிந்தோடும் சிர்ரோடையே

 அழகுக்கு  அழகூட்டும்  அழகோவியம் -தெருவில்
 அசைந்தாடி  வருகின்ற எழிலோவியம்
 பருவத்தில்  உலகாளும் மலர்க்கூட்டமே -தமிழில்
 பாடியே  ரசிப்பதில்  என்நாட்டமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக