சனி, 10 ஆகஸ்ட், 2013

manithaa

கண்களை  மூடி
 கடவுளை  தேடு
 கலக்கம் நீங்கி
 கற்பகம் தோன்றும்

 அற்புத அமைதி
 அகத்தினில்  கூடும்
 யாவும் சிவமென
 அகவொளி  கூடும்

 சஞ்சலம்  தீரும்
 சாந்தம்  சேரும்
 பஞ்சென  துயரம்
 பறந்தே  ஓடும்

 எல்லாம்  இனிக்கும்
 இனிப்பும் கசக்கும்
பொல்லா  எண்ணம்
 நில்லாது  போகும்

 நிலையாய் வாழ்வு
 நிலைத்திட  வேண்டி
 அலையும் மனதினை
 அடக்குதல் வேண்டும்

 கலையாய் மிளிரும்
 கடவுளை பணிவாய்
 அலைவாழ்  கடலிலும்
 ஆண்டவன் தெரிவான்

 தெரியும் அவனது
 திருவடி நாடு
 புரியும் உண்மை
 புறப்படு  மனிதா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக