கண்களை மூடி
கடவுளை தேடு
கலக்கம் நீங்கி
கற்பகம் தோன்றும்
அற்புத அமைதி
அகத்தினில் கூடும்
யாவும் சிவமென
அகவொளி கூடும்
சஞ்சலம் தீரும்
சாந்தம் சேரும்
பஞ்சென துயரம்
பறந்தே ஓடும்
எல்லாம் இனிக்கும்
இனிப்பும் கசக்கும்
பொல்லா எண்ணம்
நில்லாது போகும்
நிலையாய் வாழ்வு
நிலைத்திட வேண்டி
அலையும் மனதினை
அடக்குதல் வேண்டும்
கலையாய் மிளிரும்
கடவுளை பணிவாய்
அலைவாழ் கடலிலும்
ஆண்டவன் தெரிவான்
தெரியும் அவனது
திருவடி நாடு
புரியும் உண்மை
புறப்படு மனிதா
கடவுளை தேடு
கலக்கம் நீங்கி
கற்பகம் தோன்றும்
அற்புத அமைதி
அகத்தினில் கூடும்
யாவும் சிவமென
அகவொளி கூடும்
சஞ்சலம் தீரும்
சாந்தம் சேரும்
பஞ்சென துயரம்
பறந்தே ஓடும்
எல்லாம் இனிக்கும்
இனிப்பும் கசக்கும்
பொல்லா எண்ணம்
நில்லாது போகும்
நிலையாய் வாழ்வு
நிலைத்திட வேண்டி
அலையும் மனதினை
அடக்குதல் வேண்டும்
கலையாய் மிளிரும்
கடவுளை பணிவாய்
அலைவாழ் கடலிலும்
ஆண்டவன் தெரிவான்
தெரியும் அவனது
திருவடி நாடு
புரியும் உண்மை
புறப்படு மனிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக