சனி, 10 ஆகஸ்ட், 2013

mogam

பூவார்  சோலையில்
 புதுமலர்  கண்டேன்
 பொன்னெழில்  மேனியில்
 புதுமை  கொண்டேன்

 நாவார்   தமிழில்
 நயம்பட உரைத்தேன்
 நாயகி  நீயென
 நானும் நினைத்தேன்

 காரெழில்  கூந்தலில்
 கவனம் இழந்தேன்
 கண்மணி உன்னிடம்
 காதல்   அறிந்தேன்

 நிலவில் இரவில்
 நிம்மதி  மறந்தேன்
 நேரிழை உன்னால்
 நினைவும் துறந்தேன்

 பேச்சினை விட்டேன்
பிரியம்  வளர்த்தேன்
 மூச்சினை  மட்டும்
 மோகம் கொண்டேன்

இணையடி  நிழலில்
 எனது  மனமே
 துணையென  வந்திடில்
 தொடருமே இன்பம்

 இன்பங்கள்  கோடி
 இருவரும் தேடி
 அன்பெனும் வழியில்
 அமைதியைக்  காண்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக