பூவார் சோலையில்
புதுமலர் கண்டேன்
பொன்னெழில் மேனியில்
புதுமை கொண்டேன்
நாவார் தமிழில்
நயம்பட உரைத்தேன்
நாயகி நீயென
நானும் நினைத்தேன்
காரெழில் கூந்தலில்
கவனம் இழந்தேன்
கண்மணி உன்னிடம்
காதல் அறிந்தேன்
நிலவில் இரவில்
நிம்மதி மறந்தேன்
நேரிழை உன்னால்
நினைவும் துறந்தேன்
பேச்சினை விட்டேன்
பிரியம் வளர்த்தேன்
மூச்சினை மட்டும்
மோகம் கொண்டேன்
இணையடி நிழலில்
எனது மனமே
துணையென வந்திடில்
தொடருமே இன்பம்
இன்பங்கள் கோடி
இருவரும் தேடி
அன்பெனும் வழியில்
அமைதியைக் காண்போம்
புதுமலர் கண்டேன்
பொன்னெழில் மேனியில்
புதுமை கொண்டேன்
நாவார் தமிழில்
நயம்பட உரைத்தேன்
நாயகி நீயென
நானும் நினைத்தேன்
காரெழில் கூந்தலில்
கவனம் இழந்தேன்
கண்மணி உன்னிடம்
காதல் அறிந்தேன்
நிலவில் இரவில்
நிம்மதி மறந்தேன்
நேரிழை உன்னால்
நினைவும் துறந்தேன்
பேச்சினை விட்டேன்
பிரியம் வளர்த்தேன்
மூச்சினை மட்டும்
மோகம் கொண்டேன்
இணையடி நிழலில்
எனது மனமே
துணையென வந்திடில்
தொடருமே இன்பம்
இன்பங்கள் கோடி
இருவரும் தேடி
அன்பெனும் வழியில்
அமைதியைக் காண்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக