காலமெனும் காட்டாறு -நம்
கண்ணெதிரில் ஓடுதடா
சீலமிகும் மனிதரெல்லாம் -தெருவில்
சிலையாக நிற்பாரடா
ஆளைசுரண்டிப் பிழைப்பதுவும் -சிலர்
ஆளடிமை செய்வதுவும்
வேலையில்லா வீணர் செய்யும் -தினம்
விஷமமான வேலையடா
சோலைகளும் பறவைகளும் -இங்கு
சொல்லுகிற சேதி என்ன
நாலைஇந்த உலகம் -என்றும்
நமதுகையில் தானே என்று
வானத்தாய் வடிக்கின்ற -அந்த
வற்றாத கண்ணீரோ
தானமாக பூமயிலே -நமக்கு
தண்ணீராய் கொட்டுதடா
கொட்டுகிற மழையினுக்கு -வானில்
குளிர்நிளவு குடையாகும்
எட்டுகிற உயரம்வரை -நாம்
எட்டிப்பிடிக்க வேண்டாமோ
வம்புபேசி கதையளக்க -இந்த
வாழ்நாளே போதுமாடா
அன்பினாலே ஆள்வதற்கு -இனி
யாருமென்ன வேண்டாமோ
குடிசைகளும் கோபுரமாய் -நமது
குவலயத்தில் மாறாதோ
மடமைகளும் மமதைகளும் -என்று
மாயமாகிப் போகாதோ
இருப்பதைக் கொடுத்துவிடு -மனதில்
இரக்கத்தை வளர்த்துவிடு
உறக்கத்தை மறந்துவிடு -நீயிந்த
உலகத்தை வென்றுவிடு
கண்ணெதிரில் ஓடுதடா
சீலமிகும் மனிதரெல்லாம் -தெருவில்
சிலையாக நிற்பாரடா
ஆளைசுரண்டிப் பிழைப்பதுவும் -சிலர்
ஆளடிமை செய்வதுவும்
வேலையில்லா வீணர் செய்யும் -தினம்
விஷமமான வேலையடா
சோலைகளும் பறவைகளும் -இங்கு
சொல்லுகிற சேதி என்ன
நாலைஇந்த உலகம் -என்றும்
நமதுகையில் தானே என்று
வானத்தாய் வடிக்கின்ற -அந்த
வற்றாத கண்ணீரோ
தானமாக பூமயிலே -நமக்கு
தண்ணீராய் கொட்டுதடா
கொட்டுகிற மழையினுக்கு -வானில்
குளிர்நிளவு குடையாகும்
எட்டுகிற உயரம்வரை -நாம்
எட்டிப்பிடிக்க வேண்டாமோ
வம்புபேசி கதையளக்க -இந்த
வாழ்நாளே போதுமாடா
அன்பினாலே ஆள்வதற்கு -இனி
யாருமென்ன வேண்டாமோ
குடிசைகளும் கோபுரமாய் -நமது
குவலயத்தில் மாறாதோ
மடமைகளும் மமதைகளும் -என்று
மாயமாகிப் போகாதோ
இருப்பதைக் கொடுத்துவிடு -மனதில்
இரக்கத்தை வளர்த்துவிடு
உறக்கத்தை மறந்துவிடு -நீயிந்த
உலகத்தை வென்றுவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக