வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ulagamkaa

காலமெனும்  காட்டாறு -நம்
 கண்ணெதிரில்  ஓடுதடா
 சீலமிகும் மனிதரெல்லாம் -தெருவில்
 சிலையாக  நிற்பாரடா

 ஆளைசுரண்டிப்  பிழைப்பதுவும் -சிலர்
 ஆளடிமை  செய்வதுவும்
 வேலையில்லா  வீணர் செய்யும் -தினம்
 விஷமமான  வேலையடா

 சோலைகளும்  பறவைகளும் -இங்கு
 சொல்லுகிற  சேதி என்ன
 நாலைஇந்த  உலகம் -என்றும்
 நமதுகையில்  தானே என்று

 வானத்தாய்  வடிக்கின்ற -அந்த
 வற்றாத  கண்ணீரோ
 தானமாக  பூமயிலே -நமக்கு
 தண்ணீராய்  கொட்டுதடா

 கொட்டுகிற  மழையினுக்கு -வானில்
 குளிர்நிளவு  குடையாகும்
 எட்டுகிற உயரம்வரை -நாம்
 எட்டிப்பிடிக்க  வேண்டாமோ

 வம்புபேசி  கதையளக்க -இந்த
 வாழ்நாளே போதுமாடா
 அன்பினாலே  ஆள்வதற்கு -இனி
 யாருமென்ன  வேண்டாமோ

 குடிசைகளும்  கோபுரமாய் -நமது
 குவலயத்தில்  மாறாதோ
 மடமைகளும்  மமதைகளும் -என்று
 மாயமாகிப்  போகாதோ

 இருப்பதைக்  கொடுத்துவிடு -மனதில்
 இரக்கத்தை  வளர்த்துவிடு
 உறக்கத்தை  மறந்துவிடு -நீயிந்த
 உலகத்தை  வென்றுவிடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக