ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

vetri-160

இறைவன்  ஒருநாள்
 என்னிடம் வருவார்
 இர்ருப்பவர்  காத்திட
 இனியவை கேட்பேன்

 பெண்களைப்  போற்றும்
 பெருமை கேட்பேன்
 கண்களில்  மேலாம்
 கருணை  கேட்பேன்

 மண்ணகம்  வாழ்ந்திட
 மகிமை  கேட்பேன்
 மாதங்கள்  முழுதும்
 மழைவரக் கேட்பேன்

 வீரம் கேட்பேன்
 வெற்றியைக்  கேட்பேன்
 சோரம்  போகா
 சொல்வளம் கேட்பேன்

 மதியினால்  ஆளும்
 மாயம்  கேட்பேன்
 விதியை வென்றிட
 விவரம்  கேட்பேன்

 பிள்ளைகள்  கேட்பேன்
 பெரும்புகழ்  கேட்பேன்
 எல்லையில்  அமைதி
  இருந்திடக்  கேட்பேன்

 பிறவா  வரமது
 பெற்றிடக்  கேட்பேன்
 மறவாது நினைத்திடும்
 மங்களம்  கேட்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக