இறைவன் ஒருநாள்
என்னிடம் வருவார்
இர்ருப்பவர் காத்திட
இனியவை கேட்பேன்
பெண்களைப் போற்றும்
பெருமை கேட்பேன்
கண்களில் மேலாம்
கருணை கேட்பேன்
மண்ணகம் வாழ்ந்திட
மகிமை கேட்பேன்
மாதங்கள் முழுதும்
மழைவரக் கேட்பேன்
வீரம் கேட்பேன்
வெற்றியைக் கேட்பேன்
சோரம் போகா
சொல்வளம் கேட்பேன்
மதியினால் ஆளும்
மாயம் கேட்பேன்
விதியை வென்றிட
விவரம் கேட்பேன்
பிள்ளைகள் கேட்பேன்
பெரும்புகழ் கேட்பேன்
எல்லையில் அமைதி
இருந்திடக் கேட்பேன்
பிறவா வரமது
பெற்றிடக் கேட்பேன்
மறவாது நினைத்திடும்
மங்களம் கேட்பேன்
என்னிடம் வருவார்
இர்ருப்பவர் காத்திட
இனியவை கேட்பேன்
பெண்களைப் போற்றும்
பெருமை கேட்பேன்
கண்களில் மேலாம்
கருணை கேட்பேன்
மண்ணகம் வாழ்ந்திட
மகிமை கேட்பேன்
மாதங்கள் முழுதும்
மழைவரக் கேட்பேன்
வீரம் கேட்பேன்
வெற்றியைக் கேட்பேன்
சோரம் போகா
சொல்வளம் கேட்பேன்
மதியினால் ஆளும்
மாயம் கேட்பேன்
விதியை வென்றிட
விவரம் கேட்பேன்
பிள்ளைகள் கேட்பேன்
பெரும்புகழ் கேட்பேன்
எல்லையில் அமைதி
இருந்திடக் கேட்பேன்
பிறவா வரமது
பெற்றிடக் கேட்பேன்
மறவாது நினைத்திடும்
மங்களம் கேட்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக