திங்கள், 26 ஆகஸ்ட், 2013

vayaloor murugan-161.

வயலூர்  எங்கும்  பெருங்கூட்டம் -அந்த
 வள்ளல் முருகன் திருக்கூட்டம்
 பயமே  இல்லை  பணிந்தாலே -நல்ல
 பலனே உண்டு  நினைந்தாலே

 கருணை பொழியும்  கந்தனவன் -மனக்
 கவலை  தீர்க்கும்  சொந்தமவன்
 அருணகிரி போற்றும் அன்பனவன் -நம்
 ஆதிசிவன் பெற்ற  திருமுருகன்  

 பசுமை  சூழ்ந்திடும்  வயல் நடுவே -கேட்கும்
 வரம்தர  முருகன்  இருக்கின்றான்
 சுமைதனை  இறக்கிட  வாருங்கள் -மனத்
 தூய்மையில்  அவனைப்  பாருங்கள்

 பார்த்திடப்  பரவசம்  தலைக்கேறும் -வந்த
 பஞ்சமும்  நோயும்  பறந்தோடும்
 பிரார்த்தனை  அனைத்தும்  நிறைவேறும் --சிவன்
 பிள்ளையால்  அன்றோ தெளிவாகும்

 வயலூர்  முருகன்  வடிவேலன் -நம்மை
 வந்தே  காக்கும்  குணசீலன்
 துணையாய்  இருப்பான்  நம்மோடு -இனி
 துதிப்போம்  இன்றே  அன்போடு

 அள்ளித்  தருவது  வள்ளல் குணம் -நம்மை
 அனைத்துக்  காப்பது அன்புமனம்
 சொல்லித் தருவது புரிகிறதா -ஒரு
 சொர்க்கம்  இருப்பது தெரிகிறதா

 நாளும் இங்கே  வாருங்கள் -உமக்கு
 நல்லது நடந்தால்  கூறுங்கள்
 வேலும்  கோளும்  பலமளிக்கும் -நெஞ்சில்
 வெற்றி  வேலனே குடீருப்பான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக