வயலூர் எங்கும் பெருங்கூட்டம் -அந்த
வள்ளல் முருகன் திருக்கூட்டம்
பயமே இல்லை பணிந்தாலே -நல்ல
பலனே உண்டு நினைந்தாலே
கருணை பொழியும் கந்தனவன் -மனக்
கவலை தீர்க்கும் சொந்தமவன்
அருணகிரி போற்றும் அன்பனவன் -நம்
ஆதிசிவன் பெற்ற திருமுருகன்
பசுமை சூழ்ந்திடும் வயல் நடுவே -கேட்கும்
வரம்தர முருகன் இருக்கின்றான்
சுமைதனை இறக்கிட வாருங்கள் -மனத்
தூய்மையில் அவனைப் பாருங்கள்
பார்த்திடப் பரவசம் தலைக்கேறும் -வந்த
பஞ்சமும் நோயும் பறந்தோடும்
பிரார்த்தனை அனைத்தும் நிறைவேறும் --சிவன்
பிள்ளையால் அன்றோ தெளிவாகும்
வயலூர் முருகன் வடிவேலன் -நம்மை
வந்தே காக்கும் குணசீலன்
துணையாய் இருப்பான் நம்மோடு -இனி
துதிப்போம் இன்றே அன்போடு
அள்ளித் தருவது வள்ளல் குணம் -நம்மை
அனைத்துக் காப்பது அன்புமனம்
சொல்லித் தருவது புரிகிறதா -ஒரு
சொர்க்கம் இருப்பது தெரிகிறதா
நாளும் இங்கே வாருங்கள் -உமக்கு
நல்லது நடந்தால் கூறுங்கள்
வேலும் கோளும் பலமளிக்கும் -நெஞ்சில்
வெற்றி வேலனே குடீருப்பான்
வள்ளல் முருகன் திருக்கூட்டம்
பயமே இல்லை பணிந்தாலே -நல்ல
பலனே உண்டு நினைந்தாலே
கருணை பொழியும் கந்தனவன் -மனக்
கவலை தீர்க்கும் சொந்தமவன்
அருணகிரி போற்றும் அன்பனவன் -நம்
ஆதிசிவன் பெற்ற திருமுருகன்
பசுமை சூழ்ந்திடும் வயல் நடுவே -கேட்கும்
வரம்தர முருகன் இருக்கின்றான்
சுமைதனை இறக்கிட வாருங்கள் -மனத்
தூய்மையில் அவனைப் பாருங்கள்
பார்த்திடப் பரவசம் தலைக்கேறும் -வந்த
பஞ்சமும் நோயும் பறந்தோடும்
பிரார்த்தனை அனைத்தும் நிறைவேறும் --சிவன்
பிள்ளையால் அன்றோ தெளிவாகும்
வயலூர் முருகன் வடிவேலன் -நம்மை
வந்தே காக்கும் குணசீலன்
துணையாய் இருப்பான் நம்மோடு -இனி
துதிப்போம் இன்றே அன்போடு
அள்ளித் தருவது வள்ளல் குணம் -நம்மை
அனைத்துக் காப்பது அன்புமனம்
சொல்லித் தருவது புரிகிறதா -ஒரு
சொர்க்கம் இருப்பது தெரிகிறதா
நாளும் இங்கே வாருங்கள் -உமக்கு
நல்லது நடந்தால் கூறுங்கள்
வேலும் கோளும் பலமளிக்கும் -நெஞ்சில்
வெற்றி வேலனே குடீருப்பான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக