ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

kannammaa

உன்னையே  ரதிஎன்று
உருகுகின்ரேனடி  கண்ணம்மா
 என்னிலேபாதி  என்ரும்நீயடி

 கார்கால  நிலவினிலே
 காற்று வாங்கப்  போகயிலே
 தூறலாக  வந்தவளே கண்ணம்மா

 இரவு பகல் நேரத்திலே
 இளமை பாட்டு படிக்கையிலே
உலகம்நமக்கு மறந்து போகும்  கண்ணம்மா

 துடிஇடையில் சேலை செய்த
 சுகத்தை  கூட பெறவில்லையே
 துடிக்கும் என்மனசைக்  கேளு  கண்ணம்மா

 அன்னம் போல நடக்கயிலே
 ஆவி பறி  போகுதடி
 எண்ணமெல்லாம்  நீயல்லவோ  கண்ணம்மா

 என்னை  உனக்கு புரியல்லியா
 எதுவும் இன்னும் தெர்யல்லியா
 கண்ணிலே  வலை விரித்தாய்  கண்ணம்மா

 பின்னல் ஜடை  ஆடுகையில்
 பேரழகு  குலுங்கும்போது
 என்னை நானே மறந்தேனே கண்ணம்மா

 ஒன்று படும் காலம் வரும்
 உலகம் நம்மை  சேரவிடும்
 நன்றி சொல்வோம்  அப்போது  கண்ணம்மா

 பிள்ளை குட்டி அதிகம் வேண்டும்
 பெருமையான வாழ்வு வேண்டும்
 நல்லவராய்  வாழவேண்டும் கண்ணம்மா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக