சனி, 10 ஆகஸ்ட், 2013

pottri pottri

எல்லா   உலகமும்
 இர்ருப்பாய்  போற்றி
 எம்மைக்  காக்கும்
 இறைவா  போற்றி

 போற்றிப்  பாடும்
 புதல்வன்  நானே
 பூமியை  ஆளும்
 புனிதரே  போற்றி

 போற்றி  துதிப்பார்
 பெருமையை  தானே
 எங்கிலும்  அமைதி
 இறைவனே  தருவாய்

 திருவாய்  தேனாய்
 திகழும் உருவே
 தேனார்  தமிழில்
 தினமுனை  தொழுவோம்

 வானோர்   மதியில்
 வடிவம்  நீயே
 வற்றாக்  கருணை
 வளமே  போற்றி

 எண்ணும்  எழுத்தும்
 இசையும்  நீயே
 எல்லாக் காலமும்
 இருப்பவன் நீயே

 பூக்கும் மலரின்
 புன்னகை  நீயே
 புண்ணியம்  யாவும்
 தருபவன்  நீயே

 யாக்கை  என்பது
 உனது  உடமை
 யாவும்  நீயே
 நலம் அருள்வாயே

 அருளின் உருவே
 அமைதி நிழலே
 இருளைப்  போக்கும்
 இனியா  போற்றி

 நாயேன் சிறியேன்
 நன்னிலை  அறியேன்
 தாயாய்  நீயே
 தாங்கிட வேண்டும்

 அருள்நிலை உலகில்
 அனைவரும் பெற்று
 பொருளுடன்  கூடிய
 புகழினைப் பெறுக

 எழுகதிர்  செல்வா
 எங்களின்  தலைவா
 இன்னுயிர்  கக்கும்
 இறைவனே  போற்றி

 போற்றி போற்றி
 புனிதனை  போற்றி
 எனது  எண்ணம்
 எடுத்து  உரைத்தேன்

 பார்க்கும்  யாவரும்
 பயன்பெற வேண்டும்
 பாட்டுடை  தலைவா
 உன்பாதம்  போற்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக