ஞாயிறு, 28 ஜூலை, 2013

pillaiyaarpatti pillaiyaar

காணிக்கை  அளிப்போரும்
 கைகூப்பி  தொழுவோரும்
 மாணிக்க  விநாயகா
உன் மகிமை  என்னசொல்வேன்

உலகம்  காப்பதற்கு
 உச்சிப்பிள்ளை  நீயல்லவா
 பெயர்பெற்று  விளங்கும்
 பெருமானே  சரணமையா

 உடைபடும் தேங்காயும்
 உன்னத  மாலைகளும்
 நடைதனில் கிடப்பதனை
 நாங்கள்  அறிவோமே

 திருவரங்கத்து  பெருமாள்
 திருவுளம்  அறிந்ததினால்
 சிறுவனாய்  வந்து நீயும்
 சீரான  உதவி  செய்தாய்

 அரங்கன்  துயில்கொள்ள
 அழகான பாம்பணையும்
 ஆராரோ  பாடுகிறாள்
 அழகுமகள்  காவிரியாள்

 காவிரியும்  கொள்ளிடமும்
 கலக்கும்  திருவிடத்தில்
 அரங்கன்  கண்மலரும்
 அழகுதனை  என்னசொல்ல

 மாமன் துயிளிருக்க
 மருமகன்  மலையிருக்க
 சேமம்  பலபெற்று
 சிறப்பொடு  வாழ்வோமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக