அறிவால் உலகம்
அறிந்தேன் இந்நாள்
ஐயா நீதான்
அணைப்பாய் எனையே
விதியே என்று
வினையால் வந்தேன்
கதியே பெறவே
கவிதை வடித்தேன்
துதியே செய்வேன்
தூயா உன்னையே
நிதியே அருள்வாய்
நேரில் வருவாய்
தமிழால் வளர்ந்தேன்
தாயால் செழித்தேன்
அமிழ்தாம் உன்னையே
அன்பால் பணிவேன்
நன்றி நினைத்தேன்
நாயாய் உழைத்தேன்
அன்றும் என்றும்
உன்னருளால் வாழ்வேன்
பேரும் புகழும்
பிரிவும் சுகமும்
சீராய் எனக்கு
தந்தாய் நீயே
பெண்ணால் பிறந்தேன்
பெருமை அடைந்தேன்
உன்னால் அன்றோ
உலகில் மலர்ந்தேன்
கண்ணா உன்னிடம்
கருணை இலையோ
என்னைக் காக்க
என்றுநீ வருவாய்
அந்நாள் காண
ஆசை மிகுதே
அருளே திருவே
அடியேன் சரணம்
கண்ணன் திருவடி
காக்கும் மறுபடி
அதனைப் பற்றியே
அனைத்தும் பெறுவேன்
அறிந்தேன் இந்நாள்
ஐயா நீதான்
அணைப்பாய் எனையே
விதியே என்று
வினையால் வந்தேன்
கதியே பெறவே
கவிதை வடித்தேன்
துதியே செய்வேன்
தூயா உன்னையே
நிதியே அருள்வாய்
நேரில் வருவாய்
தமிழால் வளர்ந்தேன்
தாயால் செழித்தேன்
அமிழ்தாம் உன்னையே
அன்பால் பணிவேன்
நன்றி நினைத்தேன்
நாயாய் உழைத்தேன்
அன்றும் என்றும்
உன்னருளால் வாழ்வேன்
பேரும் புகழும்
பிரிவும் சுகமும்
சீராய் எனக்கு
தந்தாய் நீயே
பெண்ணால் பிறந்தேன்
பெருமை அடைந்தேன்
உன்னால் அன்றோ
உலகில் மலர்ந்தேன்
கண்ணா உன்னிடம்
கருணை இலையோ
என்னைக் காக்க
என்றுநீ வருவாய்
அந்நாள் காண
ஆசை மிகுதே
அருளே திருவே
அடியேன் சரணம்
கண்ணன் திருவடி
காக்கும் மறுபடி
அதனைப் பற்றியே
அனைத்தும் பெறுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக