சனி, 13 ஜூலை, 2013

thiruvadi

அறிவால்  உலகம்
 அறிந்தேன்  இந்நாள்
 ஐயா  நீதான்
அணைப்பாய்  எனையே

 விதியே  என்று
 வினையால்  வந்தேன்
 கதியே  பெறவே
 கவிதை வடித்தேன்

 துதியே செய்வேன்
 தூயா  உன்னையே
 நிதியே  அருள்வாய்
 நேரில்  வருவாய்

 தமிழால் வளர்ந்தேன்
 தாயால் செழித்தேன்
 அமிழ்தாம் உன்னையே
 அன்பால் பணிவேன்

 நன்றி  நினைத்தேன்
 நாயாய் உழைத்தேன்
 அன்றும் என்றும்
 உன்னருளால்  வாழ்வேன்




பேரும்  புகழும்
 பிரிவும் சுகமும்
 சீராய்  எனக்கு
 தந்தாய்  நீயே

 பெண்ணால் பிறந்தேன்
 பெருமை அடைந்தேன்
 உன்னால்  அன்றோ
 உலகில் மலர்ந்தேன்

 கண்ணா உன்னிடம்
 கருணை இலையோ
 என்னைக் காக்க
 என்றுநீ  வருவாய்

 அந்நாள்  காண
 ஆசை மிகுதே
 அருளே  திருவே
 அடியேன் சரணம்

 கண்ணன்  திருவடி
 காக்கும் மறுபடி
 அதனைப்  பற்றியே
 அனைத்தும் பெறுவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக