ஞாயிறு, 14 ஜூலை, 2013

seemaatti

இரவு  முழுதும்  விழித்தேன் -என்
 இமையில்  வைத்து  ரசித்தேன்
 உறவு வேண்டி  துடித்தேன் -நான்
 உன்னைத் தேடியே பிடித்தேன்

 பட்டப்  பகலில்  தூக்கம் -அந்த
 பாவை  பற்றியே நோக்கம்
 வெட்ட  வெளியில்  நடக்கும் -அதனை
வெளியே  சொல்லிட  தயக்கம்

 கண்கள்  தேடும் தினமும் -புதிய
 கவலை  கொள்ளுமே  மனமும்
 உன்னிடம்  உள்ளது  நற்குணமும் -நான்
 நீயின்றி இருப்பேனோ  ஒருகணமும்

 நீயல்லால் எனக்கில்லை  வாழ்வு -என்
 நிம்மதி  நீயின்றி  தாழ்வு
பாயென்ரு  சொன்னாலோ படுக்கை -என்
 பத்தினி  கையில்  நான் உடுக்கை

 நில்லென்று சொன்னாலும்  நிற்பேன் -நீ
 நிலவினைக்  கேட்டாலும்  கொடுப்பேன்
 தள்ளேன்று  சொன்னாலோ  தகிப்பேன் -உன்னை
 தலைமேலே  வைத்தே  துதிப்பேன்


 யாரெதிர்  சொன்னாலும் கேளேன் -இந்த
 இளமை  போனாலும் வாழேன்
கூரிய  வேல்விழி  காட்டி -என்னைக்
 கொல்லாதே  அழ்குச்  சீமாட்டி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக