இரவு முழுதும் விழித்தேன் -என்
இமையில் வைத்து ரசித்தேன்
உறவு வேண்டி துடித்தேன் -நான்
உன்னைத் தேடியே பிடித்தேன்
பட்டப் பகலில் தூக்கம் -அந்த
பாவை பற்றியே நோக்கம்
வெட்ட வெளியில் நடக்கும் -அதனை
வெளியே சொல்லிட தயக்கம்
கண்கள் தேடும் தினமும் -புதிய
கவலை கொள்ளுமே மனமும்
உன்னிடம் உள்ளது நற்குணமும் -நான்
நீயின்றி இருப்பேனோ ஒருகணமும்
நீயல்லால் எனக்கில்லை வாழ்வு -என்
நிம்மதி நீயின்றி தாழ்வு
பாயென்ரு சொன்னாலோ படுக்கை -என்
பத்தினி கையில் நான் உடுக்கை
நில்லென்று சொன்னாலும் நிற்பேன் -நீ
நிலவினைக் கேட்டாலும் கொடுப்பேன்
தள்ளேன்று சொன்னாலோ தகிப்பேன் -உன்னை
தலைமேலே வைத்தே துதிப்பேன்
யாரெதிர் சொன்னாலும் கேளேன் -இந்த
இளமை போனாலும் வாழேன்
கூரிய வேல்விழி காட்டி -என்னைக்
கொல்லாதே அழ்குச் சீமாட்டி
இமையில் வைத்து ரசித்தேன்
உறவு வேண்டி துடித்தேன் -நான்
உன்னைத் தேடியே பிடித்தேன்
பட்டப் பகலில் தூக்கம் -அந்த
பாவை பற்றியே நோக்கம்
வெட்ட வெளியில் நடக்கும் -அதனை
வெளியே சொல்லிட தயக்கம்
கண்கள் தேடும் தினமும் -புதிய
கவலை கொள்ளுமே மனமும்
உன்னிடம் உள்ளது நற்குணமும் -நான்
நீயின்றி இருப்பேனோ ஒருகணமும்
நீயல்லால் எனக்கில்லை வாழ்வு -என்
நிம்மதி நீயின்றி தாழ்வு
பாயென்ரு சொன்னாலோ படுக்கை -என்
பத்தினி கையில் நான் உடுக்கை
நில்லென்று சொன்னாலும் நிற்பேன் -நீ
நிலவினைக் கேட்டாலும் கொடுப்பேன்
தள்ளேன்று சொன்னாலோ தகிப்பேன் -உன்னை
தலைமேலே வைத்தே துதிப்பேன்
யாரெதிர் சொன்னாலும் கேளேன் -இந்த
இளமை போனாலும் வாழேன்
கூரிய வேல்விழி காட்டி -என்னைக்
கொல்லாதே அழ்குச் சீமாட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக