வருவாய் முருகா
மனைவியர் உடனே
தருவாய் முருகா
சகலமும் நலமும்
அழகா முருகா
அம்ழ்தெனும் தமிழே
பழமுதிர் சோலை
பதிவாழ் அரசே
செந்தூர் தனிலே
செந்திலாய்நின்றாய்
சேவல் கொடியுடன்
ஜகமே வென்றாய்
வயலூர் தனிலே
வாழும் குமரா
பயமே வருமா
பணிவார் தமக்கே
தணிகை மலையில்
தர்மம் காத்தாய்
தாரணி போற்றும்
தகவினை கொண்டாய்
பழனி மலையில்
பழமாய் நின்றாய்
பக்தரைக் காத்திடும்
பக்குவம் ஆனாய்
கந்தா கடம்பா
கதிர்வேல் முருகா
சிந்தையில் வாழும்
செல்வக் குமரா
தமிழில் பாடியே
தாளடி பணிந்தேன்
தனயனைக் காத்திட
தமிழாய் வருவாய்
உந்தனைப் பாடிட
என்னநான் செய்தேன்
எந்தனை ஆளும்
எழிலுடை வேலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக