ஞாயிறு, 14 ஜூலை, 2013

punnai nalloor maari

தென்னை  வளம்  சூழ்ந்திருக்கும் -நல்ல
 தெம்மாங்கு  பாட்டு  கேட்கும்
 அன்னை முகம்  அருள்சுரக்கும் -எங்கள்
 அழகு புன்னை  மாரி யம்மா

 ஓங்கார  ஒலி  முழங்க -எங்கும்
 உடுக்கை  சப்தம்  தாளமிட
 பாங்காக  கொலு விருக்கும் -அந்த
பரம  சிவன்  நாயகியே

 தெண்டனிட்டு  வணங்கி  நிற்போம் -தினம்
 திருவிளக்கு  பூசை  செய்வோம்
 மண்டலத்தை  ஆண்டு நிற்கும் -சிறு
 மாயக்  கண்ணன் சோதரியே

 வேப்பிலையை  கையில் வைத்து -உலகில்
 விந்தை  பலவும்  செய்பவளே
 தப்பு  செய்த  கொடியவரை -நாளும்
 தண்டிக்க  வந்த  காளி நீயே

 கர்பத்தைக்  காத்து  நிற்கும் -தூய
 கர்ப்ப  ரட்சகி  தாயே
 அற்புதங்கள் நிகழ்த்தி  ஆளும் -இனிய
 ஆலவாய்  அழகி  நீயே

 பிள்ளை   அழைத்த  குரல் -ஏனோ
 பெருந்  தேவிநீ   கேட்கலையோ
 எல்லை  இல்லா  கருணையோடு -இன்றே
 எமைக்  காக்க  வாருமம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக