தென்னை வளம் சூழ்ந்திருக்கும் -நல்ல
தெம்மாங்கு பாட்டு கேட்கும்
அன்னை முகம் அருள்சுரக்கும் -எங்கள்
அழகு புன்னை மாரி யம்மா
ஓங்கார ஒலி முழங்க -எங்கும்
உடுக்கை சப்தம் தாளமிட
பாங்காக கொலு விருக்கும் -அந்த
பரம சிவன் நாயகியே
தெண்டனிட்டு வணங்கி நிற்போம் -தினம்
திருவிளக்கு பூசை செய்வோம்
மண்டலத்தை ஆண்டு நிற்கும் -சிறு
மாயக் கண்ணன் சோதரியே
வேப்பிலையை கையில் வைத்து -உலகில்
விந்தை பலவும் செய்பவளே
தப்பு செய்த கொடியவரை -நாளும்
தண்டிக்க வந்த காளி நீயே
கர்பத்தைக் காத்து நிற்கும் -தூய
கர்ப்ப ரட்சகி தாயே
அற்புதங்கள் நிகழ்த்தி ஆளும் -இனிய
ஆலவாய் அழகி நீயே
பிள்ளை அழைத்த குரல் -ஏனோ
பெருந் தேவிநீ கேட்கலையோ
எல்லை இல்லா கருணையோடு -இன்றே
எமைக் காக்க வாருமம்மா
தெம்மாங்கு பாட்டு கேட்கும்
அன்னை முகம் அருள்சுரக்கும் -எங்கள்
அழகு புன்னை மாரி யம்மா
ஓங்கார ஒலி முழங்க -எங்கும்
உடுக்கை சப்தம் தாளமிட
பாங்காக கொலு விருக்கும் -அந்த
பரம சிவன் நாயகியே
தெண்டனிட்டு வணங்கி நிற்போம் -தினம்
திருவிளக்கு பூசை செய்வோம்
மண்டலத்தை ஆண்டு நிற்கும் -சிறு
மாயக் கண்ணன் சோதரியே
வேப்பிலையை கையில் வைத்து -உலகில்
விந்தை பலவும் செய்பவளே
தப்பு செய்த கொடியவரை -நாளும்
தண்டிக்க வந்த காளி நீயே
கர்பத்தைக் காத்து நிற்கும் -தூய
கர்ப்ப ரட்சகி தாயே
அற்புதங்கள் நிகழ்த்தி ஆளும் -இனிய
ஆலவாய் அழகி நீயே
பிள்ளை அழைத்த குரல் -ஏனோ
பெருந் தேவிநீ கேட்கலையோ
எல்லை இல்லா கருணையோடு -இன்றே
எமைக் காக்க வாருமம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக