நலம் தரும் நாயகியே அம்மா -நான்
உன்னை பாடிட வரம் தருவாய் அம்மா
இதம் பெரும் சுகமெலாம் உன்னருளே -நீ
எளியரைக் காத்திட வரம் அருள்வாய்
மலையத்துவசன் பெற்ற எங்கள் மகராசியே -எங்கள்
மாநகர் மதுரையில் உந்தன் அரசாட்சியே
கலைமிகு காஞ்சி ஆளும் காமாட்சி-தமிழ்
கவிதைப் பொருளில் வாழும் காந்திமதி
சமயபுரம் கோயில் கொண்ட மகமாயி -நீ
அபயகரம் தந்து காக்கும் அருள்மாரி
இமயவான் பெற்ற எங்கள் இளவரசி -அந்த
எல்லா உலகம் முழுவதுன் அருளாசி
பாவினில் பாடி வைத்தேன் பத்ரகாளி -கொடும்
பாவிகளை அழிப்பதில் நீயோ படுசூலி
அண்டத்தை ஆட்டி வைக்கும் ஆதிசக்தி -அந்த
ஆலமுண்ட சிவனாரின் பாதி நீயே
சீர்நடை நடந்து வரும் சீமாட்டி -எமது
ஜீவன் கடைத்தேற வரும் வழிகாட்டி
பேருடன் வாழ்வு தரும் பெருமாட்டி -இந்த
பிள்ளையை வாழ வைப்பாய் அருள்கூட்டி
என்ன தவம் செய்த தாலே -இந்த
மண்ணில் நாம் பிறந்து வந்தோம்
கண்ணனுக்கு பின்னே பிறந்த கற்பகமே -அடியேன்
கவிதையில் நின்னைப் பாட அற்புதமே
உன்னை பாடிட வரம் தருவாய் அம்மா
இதம் பெரும் சுகமெலாம் உன்னருளே -நீ
எளியரைக் காத்திட வரம் அருள்வாய்
மலையத்துவசன் பெற்ற எங்கள் மகராசியே -எங்கள்
மாநகர் மதுரையில் உந்தன் அரசாட்சியே
கலைமிகு காஞ்சி ஆளும் காமாட்சி-தமிழ்
கவிதைப் பொருளில் வாழும் காந்திமதி
சமயபுரம் கோயில் கொண்ட மகமாயி -நீ
அபயகரம் தந்து காக்கும் அருள்மாரி
இமயவான் பெற்ற எங்கள் இளவரசி -அந்த
எல்லா உலகம் முழுவதுன் அருளாசி
பாவினில் பாடி வைத்தேன் பத்ரகாளி -கொடும்
பாவிகளை அழிப்பதில் நீயோ படுசூலி
அண்டத்தை ஆட்டி வைக்கும் ஆதிசக்தி -அந்த
ஆலமுண்ட சிவனாரின் பாதி நீயே
சீர்நடை நடந்து வரும் சீமாட்டி -எமது
ஜீவன் கடைத்தேற வரும் வழிகாட்டி
பேருடன் வாழ்வு தரும் பெருமாட்டி -இந்த
பிள்ளையை வாழ வைப்பாய் அருள்கூட்டி
என்ன தவம் செய்த தாலே -இந்த
மண்ணில் நாம் பிறந்து வந்தோம்
கண்ணனுக்கு பின்னே பிறந்த கற்பகமே -அடியேன்
கவிதையில் நின்னைப் பாட அற்புதமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக