ஞாயிறு, 14 ஜூலை, 2013

naayagi kalaiezhil

நலம்  தரும்  நாயகியே  அம்மா -நான்
 உன்னை பாடிட  வரம் தருவாய் அம்மா
 இதம் பெரும் சுகமெலாம் உன்னருளே -நீ
 எளியரைக்  காத்திட  வரம் அருள்வாய்

 மலையத்துவசன்  பெற்ற எங்கள் மகராசியே -எங்கள்
 மாநகர்  மதுரையில்  உந்தன் அரசாட்சியே
 கலைமிகு  காஞ்சி  ஆளும் காமாட்சி-தமிழ்
 கவிதைப்  பொருளில்  வாழும்  காந்திமதி

 சமயபுரம்  கோயில்  கொண்ட மகமாயி -நீ
 அபயகரம்  தந்து  காக்கும்  அருள்மாரி
 இமயவான்  பெற்ற எங்கள் இளவரசி -அந்த
 எல்லா  உலகம் முழுவதுன்  அருளாசி

 பாவினில்  பாடி  வைத்தேன்  பத்ரகாளி -கொடும்
 பாவிகளை  அழிப்பதில்  நீயோ  படுசூலி
 அண்டத்தை  ஆட்டி வைக்கும்  ஆதிசக்தி -அந்த
 ஆலமுண்ட சிவனாரின்  பாதி  நீயே

 சீர்நடை நடந்து  வரும் சீமாட்டி -எமது
 ஜீவன் கடைத்தேற  வரும் வழிகாட்டி
 பேருடன் வாழ்வு தரும் பெருமாட்டி -இந்த
 பிள்ளையை  வாழ  வைப்பாய் அருள்கூட்டி

 என்ன தவம் செய்த  தாலே -இந்த
 மண்ணில் நாம் பிறந்து வந்தோம்
 கண்ணனுக்கு பின்னே  பிறந்த கற்பகமே -அடியேன்
 கவிதையில்  நின்னைப்  பாட அற்புதமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக