தாயாம் தமிழைப் பாடுவேன் -என்
தலைவன் நீயென ஆடுவேன்
வாயால் நல்லன பேசுவேன் -கொடிய
வன்முறை தவறெனக் கூறுவேன்
உறவின் பெருமை சொல்லுவேன் -உயர்
குணம் அனைத்தையும் அள்ளுவேன்
திறமையால் பெரும் பணம் ஈட்டுவேன் -உன்
திருவடி மேலெனக் காட்டுவேன்
நிலவில் மாந்தர் நடப்பதும் -நாம்
நினைக்கையில் விண்ணில் பறப்பதும் -இங்கு
வளர்ச்சி தந்திட்ட மலர்ச்சியே -இதை
எண்ணிட வருவது மகிழ்ச்சியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக