உலகம் என்பது உனதல்லவா -என்
உள்ளம் உனதுகோயில்லல்லவா
நிலவும் காற்றும் நீயல்லவா -உன்னை
நினைக்க இன்பம் வருமல்லவா
கடலில் அலையும் நீயல்லவா -இங்கு
கன்னித் தமிழின் தாயல்லவா
உடலில் உயிரும் போலல்லவா -என்றும்
உலகில் தெரியும் நிஜமல்லவா
வாழும் காலம் நீயல்லவா -நமக்கு
வாழ்வு தரும் பொருள்ளல்லவா
தாழ்வும் உயர்வும் வருமல்லவா -மண்ணில்
தர்மம் காக்கும் நிலையல்லவா
கற்பு என்பது பெண்ணல்லவா -எங்கும்
காலம் நேரம் சரியல்லவா
அற்புதம் என்பது உணர்வல்லவா -நல்ல
அழகன் என்பதும் உண்மையல்லவா
ஆசை என்பது தீதல்லவா -மன
அமைதி என்பது நிறையல்லவா
வேஷம் போடுதல் தவறல்லவா -இனி
விவரம் அறிதல் நலமல்லவா
கருணை என்பது நீயல்லவா -அந்த
கண்ணன் பெயரும் உனதல்லவா
எண்ணித துதிப்பது நானல்லவா -நான்
எல்லாம் பெற்றிட வா மன்னவா
உள்ளம் உனதுகோயில்லல்லவா
நிலவும் காற்றும் நீயல்லவா -உன்னை
நினைக்க இன்பம் வருமல்லவா
கடலில் அலையும் நீயல்லவா -இங்கு
கன்னித் தமிழின் தாயல்லவா
உடலில் உயிரும் போலல்லவா -என்றும்
உலகில் தெரியும் நிஜமல்லவா
வாழும் காலம் நீயல்லவா -நமக்கு
வாழ்வு தரும் பொருள்ளல்லவா
தாழ்வும் உயர்வும் வருமல்லவா -மண்ணில்
தர்மம் காக்கும் நிலையல்லவா
கற்பு என்பது பெண்ணல்லவா -எங்கும்
காலம் நேரம் சரியல்லவா
அற்புதம் என்பது உணர்வல்லவா -நல்ல
அழகன் என்பதும் உண்மையல்லவா
ஆசை என்பது தீதல்லவா -மன
அமைதி என்பது நிறையல்லவா
வேஷம் போடுதல் தவறல்லவா -இனி
விவரம் அறிதல் நலமல்லவா
கருணை என்பது நீயல்லவா -அந்த
கண்ணன் பெயரும் உனதல்லவா
எண்ணித துதிப்பது நானல்லவா -நான்
எல்லாம் பெற்றிட வா மன்னவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக