ஞாயிறு, 14 ஜூலை, 2013

mannavaa

உலகம்  என்பது  உனதல்லவா -என்
 உள்ளம்  உனதுகோயில்லல்லவா
 நிலவும்  காற்றும்  நீயல்லவா -உன்னை
 நினைக்க  இன்பம்  வருமல்லவா

 கடலில்  அலையும்  நீயல்லவா -இங்கு
 கன்னித் தமிழின்  தாயல்லவா
 உடலில் உயிரும்  போலல்லவா -என்றும்
 உலகில்  தெரியும் நிஜமல்லவா

 வாழும்  காலம் நீயல்லவா -நமக்கு
 வாழ்வு தரும் பொருள்ளல்லவா
 தாழ்வும் உயர்வும்  வருமல்லவா -மண்ணில்
 தர்மம்  காக்கும் நிலையல்லவா

 கற்பு  என்பது  பெண்ணல்லவா -எங்கும்
 காலம் நேரம்  சரியல்லவா
 அற்புதம்  என்பது உணர்வல்லவா -நல்ல
 அழகன்  என்பதும் உண்மையல்லவா

 ஆசை என்பது தீதல்லவா -மன
 அமைதி  என்பது நிறையல்லவா
 வேஷம்  போடுதல்  தவறல்லவா -இனி
 விவரம்  அறிதல்  நலமல்லவா

 கருணை என்பது  நீயல்லவா -அந்த
 கண்ணன் பெயரும் உனதல்லவா
எண்ணித  துதிப்பது  நானல்லவா -நான்
 எல்லாம்  பெற்றிட  வா மன்னவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக