ஞாயிறு, 28 ஜூலை, 2013

kanna

கண்ணா வருவாய்
 கவிதை  தருவேன்
 உன்னால்  தானே
 உன்னதம்  அடைவேன்

 எண்ணால் எழுத்தால்
 இருப்பவன்  நீயே
 மண்ணைத்  தின்றே
 மகிமைகள் செய்தாய்

 அலைமேல்  துயிலும்
 அழகன்  நீயே
 மலைமேல் நிற்கும்
 மாலவன்  நீயே

 கீதைப்  பொருளின்
 சாரம்  நீயே
 வேதம்  நான்கிலும்
 விளக்கமும்  நீயே

 கோபியர்  கூட்டம்
 கொஞ்சிடும் கோபாலா
 பாவியை  வதைக்கும்
 பரம்பொருள்  நீயே

 வருவாய்  வருவாய்
 வருவாய்  கண்ணா
 வளமே  வாழ்வில்
 நிறைவாய்  கண்ணா

 தினமும் உன்னையே
 தொழுவேன்  கண்ணா
 தேனின்  சுவையாய்
 திகழும்  கண்ணா

 உளநாள்  வரைக்கும்
 உனைநான் பணிவேன்
 உன்னடி  நிழலில்
 என்னைநீ  காப்பாய்

 வந்தவர்  உலகில்
 வரிசைகள்  கோடி
 வள்ளல்  சேவடி
 வருவேன்  நாடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக