கண்ணா வருவாய்
கவிதை தருவேன்
உன்னால் தானே
உன்னதம் அடைவேன்
எண்ணால் எழுத்தால்
இருப்பவன் நீயே
மண்ணைத் தின்றே
மகிமைகள் செய்தாய்
அலைமேல் துயிலும்
அழகன் நீயே
மலைமேல் நிற்கும்
மாலவன் நீயே
கீதைப் பொருளின்
சாரம் நீயே
வேதம் நான்கிலும்
விளக்கமும் நீயே
கோபியர் கூட்டம்
கொஞ்சிடும் கோபாலா
பாவியை வதைக்கும்
பரம்பொருள் நீயே
வருவாய் வருவாய்
வருவாய் கண்ணா
வளமே வாழ்வில்
நிறைவாய் கண்ணா
தினமும் உன்னையே
தொழுவேன் கண்ணா
தேனின் சுவையாய்
திகழும் கண்ணா
உளநாள் வரைக்கும்
உனைநான் பணிவேன்
உன்னடி நிழலில்
என்னைநீ காப்பாய்
வந்தவர் உலகில்
வரிசைகள் கோடி
வள்ளல் சேவடி
வருவேன் நாடி
கவிதை தருவேன்
உன்னால் தானே
உன்னதம் அடைவேன்
எண்ணால் எழுத்தால்
இருப்பவன் நீயே
மண்ணைத் தின்றே
மகிமைகள் செய்தாய்
அலைமேல் துயிலும்
அழகன் நீயே
மலைமேல் நிற்கும்
மாலவன் நீயே
கீதைப் பொருளின்
சாரம் நீயே
வேதம் நான்கிலும்
விளக்கமும் நீயே
கோபியர் கூட்டம்
கொஞ்சிடும் கோபாலா
பாவியை வதைக்கும்
பரம்பொருள் நீயே
வருவாய் வருவாய்
வருவாய் கண்ணா
வளமே வாழ்வில்
நிறைவாய் கண்ணா
தினமும் உன்னையே
தொழுவேன் கண்ணா
தேனின் சுவையாய்
திகழும் கண்ணா
உளநாள் வரைக்கும்
உனைநான் பணிவேன்
உன்னடி நிழலில்
என்னைநீ காப்பாய்
வந்தவர் உலகில்
வரிசைகள் கோடி
வள்ளல் சேவடி
வருவேன் நாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக