அறிவால் உன்னைக் கண்டேன் -தமிழ்
அமுதாம் தேனை உண்டேன்
சிறகால் வானம் செல்வேன் -பின்
சிலநாள் திரும்பி வருவேன்
கடலைக் கடந்து பறப்பேன் -வந்த
கவலை யாவும் மறப்பேன்
உடலை உடமை துறப்பேன் -தூய
உன்னடி மலராய் கிடப்பேன்
பறவை போலவே திரிந்தேன் -வரும்
பசி தூக்கமும் மறந்தேன்
உறவை பகையை பிரிந்தேன் -என்றும்
உன்புகழ் பாடவே நினைந்தேன்
நன்றி மறந்தோர் நடுவே -நான்
நலமாய் நற்பணி புரிவேன்
அன்றும் இன்றும் என்றுமே -நல்ல
அன்புதான் உலகினை ஆளுமே
பெண்ணின் உயர்வினைப் போற்றுவேன் -அவர்கள்
பெருமையால் வாழ்ந்திட தூண்டுவேன்
கண்ணாம் கற்பென சாற்றுவேன் -வரும்
காலங்கள் நமதென மாற்றுவேன்
அமுதாம் தேனை உண்டேன்
சிறகால் வானம் செல்வேன் -பின்
சிலநாள் திரும்பி வருவேன்
கடலைக் கடந்து பறப்பேன் -வந்த
கவலை யாவும் மறப்பேன்
உடலை உடமை துறப்பேன் -தூய
உன்னடி மலராய் கிடப்பேன்
பறவை போலவே திரிந்தேன் -வரும்
பசி தூக்கமும் மறந்தேன்
உறவை பகையை பிரிந்தேன் -என்றும்
உன்புகழ் பாடவே நினைந்தேன்
நன்றி மறந்தோர் நடுவே -நான்
நலமாய் நற்பணி புரிவேன்
அன்றும் இன்றும் என்றுமே -நல்ல
அன்புதான் உலகினை ஆளுமே
பெண்ணின் உயர்வினைப் போற்றுவேன் -அவர்கள்
பெருமையால் வாழ்ந்திட தூண்டுவேன்
கண்ணாம் கற்பென சாற்றுவேன் -வரும்
காலங்கள் நமதென மாற்றுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக