ஞாயிறு, 14 ஜூலை, 2013

paravai

அறிவால்  உன்னைக் கண்டேன் -தமிழ்
 அமுதாம்  தேனை  உண்டேன்
 சிறகால் வானம்  செல்வேன் -பின்
 சிலநாள்  திரும்பி  வருவேன்

 கடலைக்  கடந்து பறப்பேன் -வந்த
 கவலை  யாவும் மறப்பேன்
 உடலை உடமை  துறப்பேன் -தூய
 உன்னடி மலராய்  கிடப்பேன்

 பறவை போலவே திரிந்தேன் -வரும்
 பசி  தூக்கமும்  மறந்தேன்
 உறவை  பகையை  பிரிந்தேன் -என்றும்
 உன்புகழ்  பாடவே  நினைந்தேன்

 நன்றி  மறந்தோர் நடுவே -நான்
 நலமாய்  நற்பணி  புரிவேன்
 அன்றும் இன்றும்  என்றுமே -நல்ல
 அன்புதான் உலகினை  ஆளுமே

 பெண்ணின் உயர்வினைப்  போற்றுவேன் -அவர்கள்
 பெருமையால்  வாழ்ந்திட  தூண்டுவேன்
 கண்ணாம்  கற்பென  சாற்றுவேன் -வரும்
 காலங்கள்  நமதென  மாற்றுவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக