சனி, 13 ஜூலை, 2013

sinthanai

காலம்  மாறிப் போனாலும் -அந்தக்
 கடவுள்  என்னை அழைத்தாலும்
ஞாலம்  என்பது உள்ளவரை -நானும்
 தமிழால் நிலைத்து நிற்ப்பேன்


 இரவும்  பகலும்  எனக்கில்லை -வரும்
 இன்ப  துன்பம்  இல்லாநிலை
 உறவும் பகையும் செல்லாது -உலகில்
 உண்மை  என்றுமே  மாறாது

 மாறும்  உலகம்  மாறிடவே -நம்
 மக்கள்  சிந்தனை செய்வாரே
 ஏற்றம்  இன்னும் பெறுவதற்கே -அவர்கள்
 இரவு  பகலாய்  உழைப்பார்கள்

 உழைப்பின் பலனை அடைவாரே -நாளும்
 உயரிய  நிலையினை பெறுவாரே
 கலக்கம்  இன்றியே மகிழ்வாரே -அந்த
 கண்ணனின் அருளால் உயர்வாரே

 பெண்ணின்  பெருமை அறிவாரே -வாழ
 பிழைகள்  எதுவும் செய்யாரே
 மண்ணின் குணத்தை  மதிப்பாரே -தாயை
 மதித்து  என்றும் நடப்பாரே

 நன்றி  என்பதை  மறவாரே -இங்கு
 நமக்கு  நாமென நினைப்பாரே
 ஒன்று  பட்டே  நிற்பாரே -என்றும்
 உண்மை வழியினில் நடப்பாரே

தமிழின்  பெருமை அறிவார்கள் -வெறும்
 தலைக்கனம் எதுவும் கொள்ளார்கள்
பொய்  என்பதே  தெரியார்கள் -இன்னும்
 பெரிய  புகழினைப் பெறுவார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக