காலம் மாறிப் போனாலும் -அந்தக்
கடவுள் என்னை அழைத்தாலும்
ஞாலம் என்பது உள்ளவரை -நானும்
தமிழால் நிலைத்து நிற்ப்பேன்
இரவும் பகலும் எனக்கில்லை -வரும்
இன்ப துன்பம் இல்லாநிலை
உறவும் பகையும் செல்லாது -உலகில்
உண்மை என்றுமே மாறாது
மாறும் உலகம் மாறிடவே -நம்
மக்கள் சிந்தனை செய்வாரே
ஏற்றம் இன்னும் பெறுவதற்கே -அவர்கள்
இரவு பகலாய் உழைப்பார்கள்
உழைப்பின் பலனை அடைவாரே -நாளும்
உயரிய நிலையினை பெறுவாரே
கலக்கம் இன்றியே மகிழ்வாரே -அந்த
கண்ணனின் அருளால் உயர்வாரே
பெண்ணின் பெருமை அறிவாரே -வாழ
பிழைகள் எதுவும் செய்யாரே
மண்ணின் குணத்தை மதிப்பாரே -தாயை
மதித்து என்றும் நடப்பாரே
நன்றி என்பதை மறவாரே -இங்கு
நமக்கு நாமென நினைப்பாரே
ஒன்று பட்டே நிற்பாரே -என்றும்
உண்மை வழியினில் நடப்பாரே
தமிழின் பெருமை அறிவார்கள் -வெறும்
தலைக்கனம் எதுவும் கொள்ளார்கள்
பொய் என்பதே தெரியார்கள் -இன்னும்
பெரிய புகழினைப் பெறுவார்கள்
கடவுள் என்னை அழைத்தாலும்
ஞாலம் என்பது உள்ளவரை -நானும்
தமிழால் நிலைத்து நிற்ப்பேன்
இரவும் பகலும் எனக்கில்லை -வரும்
இன்ப துன்பம் இல்லாநிலை
உறவும் பகையும் செல்லாது -உலகில்
உண்மை என்றுமே மாறாது
மாறும் உலகம் மாறிடவே -நம்
மக்கள் சிந்தனை செய்வாரே
ஏற்றம் இன்னும் பெறுவதற்கே -அவர்கள்
இரவு பகலாய் உழைப்பார்கள்
உழைப்பின் பலனை அடைவாரே -நாளும்
உயரிய நிலையினை பெறுவாரே
கலக்கம் இன்றியே மகிழ்வாரே -அந்த
கண்ணனின் அருளால் உயர்வாரே
பெண்ணின் பெருமை அறிவாரே -வாழ
பிழைகள் எதுவும் செய்யாரே
மண்ணின் குணத்தை மதிப்பாரே -தாயை
மதித்து என்றும் நடப்பாரே
நன்றி என்பதை மறவாரே -இங்கு
நமக்கு நாமென நினைப்பாரே
ஒன்று பட்டே நிற்பாரே -என்றும்
உண்மை வழியினில் நடப்பாரே
தமிழின் பெருமை அறிவார்கள் -வெறும்
தலைக்கனம் எதுவும் கொள்ளார்கள்
பொய் என்பதே தெரியார்கள் -இன்னும்
பெரிய புகழினைப் பெறுவார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக