திருநாள் தன்னில் உனைக் கண்டேன் -உன்
திருமுக அழகில் மனம் கொண்டேன்
வருநாள் எதுவென தினம் நொந்தேன் -என்
வாழ்வே நீயென திடம் வைத்தேன்
வில்லேனத் தெரிவது உன் புருவம் -பலர்
வியந்து பார்ப்பது உன் உருவம்
துள்ளும் அழகு திகழ் பருவம் -பிறர்
துடிப்பதை ரசிப்பது உன் கருவம்
நாலடி நடந்திடக் கால் வலிக்கும் -நீ
நாவினால் பேசினால் வாய் மணக்கும்
நூலெனும் இடையோ தினம் கணக்கும் -நாவில்
நின்பெயர் சொல்லிட தேன் சுரக்கும்
கைப்பிடி உள்ளது உனது இடை -எனது
கவனம் இழப்பது நினது சடை -
விற்பனை செய்திட வைத்த கடை - இனி
விலகி ஓடுதே எனது படை
அம்பினால் துளைத்தது எனது உடல் -நீ
ஆழம் கண்டிடா அழகுக் கடல்
வெம்பித் துடிப்பது எனது மனம் -வீணே
விலகி ஓடுதல் என்ன குணம்
நானோ தெருவில் தினம் அலைந்தேன் -என்
நாயகி உன்னிடம் ஏன் தொலைந்தேன்
மானே மரகதமே மனம் இரங்கு -உனது
மடியைத் தேடுது என் மனக்குரங்கு
திருமுக அழகில் மனம் கொண்டேன்
வருநாள் எதுவென தினம் நொந்தேன் -என்
வாழ்வே நீயென திடம் வைத்தேன்
வில்லேனத் தெரிவது உன் புருவம் -பலர்
வியந்து பார்ப்பது உன் உருவம்
துள்ளும் அழகு திகழ் பருவம் -பிறர்
துடிப்பதை ரசிப்பது உன் கருவம்
நாலடி நடந்திடக் கால் வலிக்கும் -நீ
நாவினால் பேசினால் வாய் மணக்கும்
நூலெனும் இடையோ தினம் கணக்கும் -நாவில்
நின்பெயர் சொல்லிட தேன் சுரக்கும்
கைப்பிடி உள்ளது உனது இடை -எனது
கவனம் இழப்பது நினது சடை -
விற்பனை செய்திட வைத்த கடை - இனி
விலகி ஓடுதே எனது படை
அம்பினால் துளைத்தது எனது உடல் -நீ
ஆழம் கண்டிடா அழகுக் கடல்
வெம்பித் துடிப்பது எனது மனம் -வீணே
விலகி ஓடுதல் என்ன குணம்
நானோ தெருவில் தினம் அலைந்தேன் -என்
நாயகி உன்னிடம் ஏன் தொலைந்தேன்
மானே மரகதமே மனம் இரங்கு -உனது
மடியைத் தேடுது என் மனக்குரங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக