ஞாயிறு, 14 ஜூலை, 2013

manakkuranku

திருநாள்  தன்னில்  உனைக்  கண்டேன் -உன்
 திருமுக  அழகில்  மனம் கொண்டேன்
 வருநாள்  எதுவென  தினம் நொந்தேன் -என்
 வாழ்வே  நீயென  திடம் வைத்தேன்

 வில்லேனத்  தெரிவது  உன் புருவம் -பலர்
 வியந்து  பார்ப்பது  உன்  உருவம்
 துள்ளும்  அழகு  திகழ்  பருவம் -பிறர்
 துடிப்பதை  ரசிப்பது உன் கருவம்

 நாலடி  நடந்திடக்  கால்  வலிக்கும் -நீ
 நாவினால்  பேசினால் வாய்  மணக்கும்
நூலெனும்  இடையோ தினம் கணக்கும் -நாவில்
 நின்பெயர்  சொல்லிட  தேன்  சுரக்கும்

கைப்பிடி  உள்ளது  உனது இடை -எனது
கவனம்  இழப்பது  நினது சடை -
விற்பனை  செய்திட  வைத்த கடை - இனி
விலகி  ஓடுதே  எனது படை

அம்பினால்  துளைத்தது  எனது  உடல் -நீ
 ஆழம்  கண்டிடா  அழகுக் கடல்
 வெம்பித்  துடிப்பது  எனது மனம் -வீணே
 விலகி  ஓடுதல்  என்ன குணம்

 நானோ  தெருவில்  தினம் அலைந்தேன் -என்
 நாயகி  உன்னிடம் ஏன் தொலைந்தேன்
 மானே  மரகதமே  மனம்  இரங்கு -உனது
 மடியைத் தேடுது  என் மனக்குரங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக