சனி, 10 ஆகஸ்ட், 2013

pillaiyaarpatti karpaka vinaayakar

அற்புத  அழகு -நம்
 அகத்தினில்  தெளிவு
 கற்பகத்  திருவடி -மலர்
 பற்றிட  இனிது

 குடவரைக் கோவில் -நம்
 கொற்றவன் அருளால்
 சிற்பிகள்  அன்று -இங்கு
 செய்தனர்  நன்று

 அற்புத  மூர்த்தி -நாம்
 அடையலாம்  கீர்த்தி
 கற்பகத்  திருவினைக் -கண்ணால்
 கண்டிட  நேர்த்தி

 தொப்பைக்  கணபதி -தினம்
 தொழுதிட  அமைதி
 அப்பம் ஆவலுடன் -இங்கே
 அனைவரும் தொழுவார்

 சதுர்த்தி  நாளில் -நான்கு
 சக்கரத்  தேரில்
 சுற்றியே  வருவார் -நமக்கு
 சுகமெலாம் தருவார்

 வல்லமை பெற்றிட -இந்த
 வல்லபை பணிவோம்
 அல்லல்  நீங்கிடும் -என்றும்
 அகவொளி  கூடிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக