மானாடும் சோலை -வண்ண
மலராடும் வேளை
மீனாடும் கண்ணாள் -புது
மின்னலாய் வந்தாள்
ஏனென்று கேட்டேன் -அவள்
எள்ளியே சிரித்தாள்
நானென்று சொன்னேன் -சற்று
நளினமாய் முறைத்தாள்
ஈரெட்டு வயது -நல்ல
இளமையில் மனது
கால் தொட்டு கூந்தல் -இரு
கண்களில் மையல்
பேரென்ன என்றேன் -தன
பின்னலை இழுத்தாள்
ஊரென்ன என்றேன் -ஏனோ
உற்றென்னைப் பார்த்தாள்
தங்கத்தில் அங்கம் -அது
தணலாக மின்னும்
சிங்கமாய் சிலிர்ப்பு -நம்
செந்தமிழ் வனப்பு
முத்தாக சிரிப்பு -வான்
முழுமதியின் வார்ப்பு
பித்தாகிப் போனேன் -சிறு
பிள்ளை போலானேன்
கொத்தாகப் பறித்தாள் -என்னை
கொலை செய்து விட்டாள்
செத்தாலும் மறவேன் -அவள்
சீரடியை தொடர்வேன்
மலராடும் வேளை
மீனாடும் கண்ணாள் -புது
மின்னலாய் வந்தாள்
ஏனென்று கேட்டேன் -அவள்
எள்ளியே சிரித்தாள்
நானென்று சொன்னேன் -சற்று
நளினமாய் முறைத்தாள்
ஈரெட்டு வயது -நல்ல
இளமையில் மனது
கால் தொட்டு கூந்தல் -இரு
கண்களில் மையல்
பேரென்ன என்றேன் -தன
பின்னலை இழுத்தாள்
ஊரென்ன என்றேன் -ஏனோ
உற்றென்னைப் பார்த்தாள்
தங்கத்தில் அங்கம் -அது
தணலாக மின்னும்
சிங்கமாய் சிலிர்ப்பு -நம்
செந்தமிழ் வனப்பு
முத்தாக சிரிப்பு -வான்
முழுமதியின் வார்ப்பு
பித்தாகிப் போனேன் -சிறு
பிள்ளை போலானேன்
கொத்தாகப் பறித்தாள் -என்னை
கொலை செய்து விட்டாள்
செத்தாலும் மறவேன் -அவள்
சீரடியை தொடர்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக