ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

siru pillai-168.

மானாடும்  சோலை -வண்ண
மலராடும்  வேளை
 மீனாடும்  கண்ணாள் -புது
 மின்னலாய்  வந்தாள்

 ஏனென்று  கேட்டேன் -அவள்
 எள்ளியே  சிரித்தாள்
 நானென்று  சொன்னேன் -சற்று
 நளினமாய்  முறைத்தாள்

 ஈரெட்டு  வயது -நல்ல
 இளமையில்  மனது
 கால் தொட்டு  கூந்தல் -இரு
 கண்களில்  மையல்

 பேரென்ன  என்றேன் -தன
 பின்னலை  இழுத்தாள்
 ஊரென்ன  என்றேன் -ஏனோ
 உற்றென்னைப்  பார்த்தாள்

 தங்கத்தில்  அங்கம் -அது
 தணலாக  மின்னும்
 சிங்கமாய்  சிலிர்ப்பு -நம்
 செந்தமிழ்  வனப்பு

 முத்தாக  சிரிப்பு -வான்
 முழுமதியின்  வார்ப்பு
 பித்தாகிப்  போனேன் -சிறு
 பிள்ளை  போலானேன்

 கொத்தாகப்  பறித்தாள் -என்னை
 கொலை செய்து  விட்டாள்
 செத்தாலும்  மறவேன் -அவள்
 சீரடியை  தொடர்வேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக