வானத்து நிலவென வந்து விட்டாள் -என்
வாழ்வுக்கு அர்த்தத்தை தந்து விட்டாள்
கானத்துக் குயில் தரும் இனிமையிலே -அவளைத்
கலந்திடத் துடித்தேன் நான் தனிமையிலே
சிரித்தால் சீர்பெறும் நல்ல பல்வரிசை -ஒரு
சிலைபோல் செய்தது இறைவன் கைவரிசை
விரித்திட்ட வாழையின் மடல் போல -சற்று
வியந்து பார்த்தால் பொங்கும் கடல்போல
நடந்தால் கிடைப்பது புதிய நாடகமே -அந்த
நால்வகை குணங்களும் அவள் வசமே
படர்ந்தாள் மல்லிகைக் கோடி போலே -உற்று
பார்த்தவர் மனதில் பெரும் இடி போலே
தோழி உடன்வர தினம் செல்லும் -பின்
தொடர்ந்தால் அவரது உடல் சாயும்
வேலி இல்லாத விளை நிலமாய் -தினம்
வெற்றிக் கொடி பவனி வருகின்றாள்
மனதில் உள்ளதை நானே சொல்வதற்கு -ஏனோ
மற்றவர் போல பயம் எனக்கெதற்கு
கனவில் வந்திட்ட கதை சொல்வேன் -அவளது
காலடி மண்ணையும் நான் தொழுவேன்
கவிதை படித்திடும் செல்லக் கண்மணிகாள் -அவளைக்
கண்டால் கனிவுடன் இதைச் சொல்வீர்
புவியில் வாழ்வது அவளை ரசிப்பதற்கே -எனது
புலம்பல் தீர்ந்திட நல்வழி சொல்வீர்
வாழ்வுக்கு அர்த்தத்தை தந்து விட்டாள்
கானத்துக் குயில் தரும் இனிமையிலே -அவளைத்
கலந்திடத் துடித்தேன் நான் தனிமையிலே
சிரித்தால் சீர்பெறும் நல்ல பல்வரிசை -ஒரு
சிலைபோல் செய்தது இறைவன் கைவரிசை
விரித்திட்ட வாழையின் மடல் போல -சற்று
வியந்து பார்த்தால் பொங்கும் கடல்போல
நடந்தால் கிடைப்பது புதிய நாடகமே -அந்த
நால்வகை குணங்களும் அவள் வசமே
படர்ந்தாள் மல்லிகைக் கோடி போலே -உற்று
பார்த்தவர் மனதில் பெரும் இடி போலே
தோழி உடன்வர தினம் செல்லும் -பின்
தொடர்ந்தால் அவரது உடல் சாயும்
வேலி இல்லாத விளை நிலமாய் -தினம்
வெற்றிக் கொடி பவனி வருகின்றாள்
மனதில் உள்ளதை நானே சொல்வதற்கு -ஏனோ
மற்றவர் போல பயம் எனக்கெதற்கு
கனவில் வந்திட்ட கதை சொல்வேன் -அவளது
காலடி மண்ணையும் நான் தொழுவேன்
கவிதை படித்திடும் செல்லக் கண்மணிகாள் -அவளைக்
கண்டால் கனிவுடன் இதைச் சொல்வீர்
புவியில் வாழ்வது அவளை ரசிப்பதற்கே -எனது
புலம்பல் தீர்ந்திட நல்வழி சொல்வீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக