ஞாயிறு, 20 அக்டோபர், 2013

kaadhalthodhu-178.

வானத்து  நிலவென  வந்து  விட்டாள் -என்
 வாழ்வுக்கு  அர்த்தத்தை  தந்து  விட்டாள்
 கானத்துக் குயில்  தரும் இனிமையிலே -அவளைத்
 கலந்திடத் துடித்தேன்  நான் தனிமையிலே

 சிரித்தால்  சீர்பெறும்  நல்ல பல்வரிசை -ஒரு
 சிலைபோல்  செய்தது  இறைவன் கைவரிசை
 விரித்திட்ட  வாழையின்  மடல் போல -சற்று
 வியந்து  பார்த்தால்  பொங்கும்  கடல்போல

 நடந்தால்  கிடைப்பது  புதிய  நாடகமே -அந்த
 நால்வகை  குணங்களும்  அவள்   வசமே
 படர்ந்தாள்  மல்லிகைக்  கோடி போலே -உற்று
 பார்த்தவர்  மனதில்   பெரும்  இடி போலே

 தோழி  உடன்வர   தினம்  செல்லும் -பின்
 தொடர்ந்தால்  அவரது உடல்  சாயும்
 வேலி  இல்லாத  விளை  நிலமாய் -தினம்
 வெற்றிக்  கொடி  பவனி  வருகின்றாள்

 மனதில்  உள்ளதை  நானே  சொல்வதற்கு -ஏனோ
 மற்றவர்  போல பயம்  எனக்கெதற்கு
 கனவில்  வந்திட்ட  கதை  சொல்வேன் -அவளது
 காலடி  மண்ணையும்  நான் தொழுவேன்

 கவிதை  படித்திடும்  செல்லக் கண்மணிகாள் -அவளைக்
 கண்டால்  கனிவுடன்  இதைச்  சொல்வீர்
 புவியில்  வாழ்வது  அவளை  ரசிப்பதற்கே -எனது
 புலம்பல்  தீர்ந்திட  நல்வழி  சொல்வீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக