புதன், 10 ஜூலை, 2019

பாடம் 684

கனவினில்        வந்தாள்     ---என்
காதலைச்      சொன்னாள்
நினைவினில்      விழித்தேன்   ---எனோ
நில்லாது      மறைந்தாள்

உறவினை     எண்ணியே     உருகுது    நெஞ்சம்    --அவள்
உருவினைக்   கண்டிட      உலகமே    தஞ்சம்
வரவினை     எண்ணி     வாடுது      மஞ்சம்    ---இனி நீ
வந்தால்      என்னிடம்     வளங்கள்    கொஞ்சும்

சின்ன      மெல்லிடை    சிலிர்ப்பினை     ஊட்டும்    --அவள்
செம்பவள     இதழ்கள்     ஜீவனை      வாட்டும்
அன்னமும்     நடையில்     அவளிடம்     தோற்கும்    ---தினம்
அள்ளியே       அணைத்தால்     என்னுடல்    வேர்க்கும்

சொல்லிக்      கொடுப்பாள்    சுகம்பெறு     கலைகள்   ---அந்த
தோகையாள்   கிடைத்தால்   எனக்கு    சுக்கிர   திசைகள்
பள்ளிப்    பாடங்கள்     படித்திட     வேண்டும்   ---இனியென்
பாவை    மடியினில்      துயில்     பெறவேண்டும்

பிள்ளைகள்      பாவும்      பெற்றிட     வேண்டும்    ---இங்கு
பெருமையில்   அவரை    நன்கு     வளர்த்திட    வேண்டும்
நல்லவை      தீயவை     நான்    சொலல்      வேண்டும்   ---நம்
நாட்டைக்     காத்திட    என்றும்     நாம்  எழ    வேண்டும்

1 கருத்து: