நீரோடும் பாதையில் ---என்னை
நெஞ்சார அனைத்தவள்
சீராட்ட வருவாளா ---நல்ல
சிநேகிதி ஆவாளா
கண்டதும் மயங்கினேன் --எனோ
காதலில் மூழ்கினேன்
திண்டாட்டம் ஆகுமா ---இல்லை
தேனாக இனிக்குமா
வாய் விட்டுச் சிரிக்கிறாள் ---என்னை
வாவென்று அழைக்கிறாள்
பாய்போட்டு படுக்கவா ---இல்லை
பயந்தோடிப் போகவா
என்னதான் செய்வது ---இதனை
யாரிடம் சொல்வது
கன்னியின் பார்வையில் ---நான்
கல்லாக நிற்கிறேன்
நாட்டோரே கேளுங்கள் ---எனக்கு
நல்லவழி கூறுங்கள்
வீட்டிற்கு அழைக்கிறேன் ---பெரிய
விருந்தொன்றும் தருகிறேன்
துணையாக அவள் வேண்டுமே ----நீங்கள்
தூதாக செல்லுங்கள்
இணையாக வாழுவோம் ---காதல்
இன்பத்தில் மூழ்குவோம்
நெஞ்சார அனைத்தவள்
சீராட்ட வருவாளா ---நல்ல
சிநேகிதி ஆவாளா
கண்டதும் மயங்கினேன் --எனோ
காதலில் மூழ்கினேன்
திண்டாட்டம் ஆகுமா ---இல்லை
தேனாக இனிக்குமா
வாய் விட்டுச் சிரிக்கிறாள் ---என்னை
வாவென்று அழைக்கிறாள்
பாய்போட்டு படுக்கவா ---இல்லை
பயந்தோடிப் போகவா
என்னதான் செய்வது ---இதனை
யாரிடம் சொல்வது
கன்னியின் பார்வையில் ---நான்
கல்லாக நிற்கிறேன்
நாட்டோரே கேளுங்கள் ---எனக்கு
நல்லவழி கூறுங்கள்
வீட்டிற்கு அழைக்கிறேன் ---பெரிய
விருந்தொன்றும் தருகிறேன்
துணையாக அவள் வேண்டுமே ----நீங்கள்
தூதாக செல்லுங்கள்
இணையாக வாழுவோம் ---காதல்
இன்பத்தில் மூழ்குவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக