வெள்ளி, 5 ஜூலை, 2019

நன்றி 671

என்னை    படைத்தவன்  இறைவன்   ---அவன் 
எல்லாப்   பொருளிலும்   உள்ளவன் 
முன்னம்   வந்திட்ட   முதல்வன்    ---அவனே 
மோகம்    தீர்க்கும்   தலைவன் 

கண்களில்   ஒளியினைக்    கொடுத்தான்   --அவன் 
கருணையை    மனங்களில்   படைத்தான் 
பெண்களில்    அழகினை  அமைத்தான்   ---நாம் 
பேசிட      மொழியினைக்    கொடுத்தான் 

கூடியே   வாழ்ந்திட    சொன்னான்   ---இங்கே 
கூட்டுக     குடும்பங்கள்    அமைத்தான் 
தேடியே     உழைத்திட    சொன்னான்   ---நம்மை 
தினம்  தினம்     மகிழவும்     வைத்தான் 

அன்பை      காட்டிட      சொன்னான்   ---நாம் 
அனைவரும்     சமமே    என்றான் 
பண்பை    கற்றுக்     கொடுத்தான்   ---போக 
நல்ல      பாதையும்   வகுத்துக்    கொடுத்தான் 

இவ்வளவு   தந்த     இறைவனை    --நாம் 
என்றேனும்      நினைத்தது     உண்டா 
நன்றி     நமக்கென்றும்      வேண்டும்   --அதுவே 
நன்மை     பலவும்     கொடுக்கும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக