என்னை படைத்தவன் இறைவன் ---அவன்
எல்லாப் பொருளிலும் உள்ளவன்
முன்னம் வந்திட்ட முதல்வன் ---அவனே
மோகம் தீர்க்கும் தலைவன்
கண்களில் ஒளியினைக் கொடுத்தான் --அவன்
கருணையை மனங்களில் படைத்தான்
பெண்களில் அழகினை அமைத்தான் ---நாம்
பேசிட மொழியினைக் கொடுத்தான்
கூடியே வாழ்ந்திட சொன்னான் ---இங்கே
கூட்டுக குடும்பங்கள் அமைத்தான்
தேடியே உழைத்திட சொன்னான் ---நம்மை
தினம் தினம் மகிழவும் வைத்தான்
அன்பை காட்டிட சொன்னான் ---நாம்
அனைவரும் சமமே என்றான்
பண்பை கற்றுக் கொடுத்தான் ---போக
நல்ல பாதையும் வகுத்துக் கொடுத்தான்
இவ்வளவு தந்த இறைவனை --நாம்
என்றேனும் நினைத்தது உண்டா
நன்றி நமக்கென்றும் வேண்டும் --அதுவே
நன்மை பலவும் கொடுக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக