வியாழன், 18 ஜூலை, 2019

மாயம் 7 1 3

கதிர்கள்       எழுந்தன          துணையாக   --மனம்
களிப்பில்       ஆழ்ந்தது      நிஜமாக
புதிரும்       புரிந்தது     நலமாக    --காதல்
பொங்கி    மலர்ந்தது     இனிதாக

தலைவன்    என்னுடன்     துணையானான்   ---அவன்
தழுவி     அணைத்து     சுகம்     தந்தான்
கலைகள்    யாவையும்    கற்க   வைத்தான்  ---என்னை
காற்றினில்    ஏற்றி     சுற்ற    வைத்தான்

இப்படி      இருந்தோம்      சில காலம்    ---இனி
எனக்கு     இதுதான்    நல்ல   எதிர்காலம்
செப்படி      வித்தைகள்     அந்நாளில்    ---அவன்
சீதனம்      தந்தது     என்தோளில்

உருகிக்       கிடந்தேன்     உறவாடி   ---உலகில்
அவனே       எனக்குச்    சரிஜோடி
மருவிடும்    போதினிலே     மயக்கம்     வரும்   ---அவனை
மனதில்      நினைத்தால்     துணிச்சல்  தரும்

பொன்னுடலில்      இட்டான்     பூக்கோலம்    ---அவனை
புருஷனாய்       அடைந்தது    பொற்காலம்
கன்றிய      என்னுடலெங்கும்     காயங்களே    ---அன்று
கள்வன்      செய்து   வைத்த    மாயங்களே  - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக