கதிர்கள் எழுந்தன துணையாக --மனம்
களிப்பில் ஆழ்ந்தது நிஜமாக
புதிரும் புரிந்தது நலமாக --காதல்
பொங்கி மலர்ந்தது இனிதாக
தலைவன் என்னுடன் துணையானான் ---அவன்
தழுவி அணைத்து சுகம் தந்தான்
கலைகள் யாவையும் கற்க வைத்தான் ---என்னை
காற்றினில் ஏற்றி சுற்ற வைத்தான்
இப்படி இருந்தோம் சில காலம் ---இனி
எனக்கு இதுதான் நல்ல எதிர்காலம்
செப்படி வித்தைகள் அந்நாளில் ---அவன்
சீதனம் தந்தது என்தோளில்
உருகிக் கிடந்தேன் உறவாடி ---உலகில்
அவனே எனக்குச் சரிஜோடி
மருவிடும் போதினிலே மயக்கம் வரும் ---அவனை
மனதில் நினைத்தால் துணிச்சல் தரும்
பொன்னுடலில் இட்டான் பூக்கோலம் ---அவனை
புருஷனாய் அடைந்தது பொற்காலம்
கன்றிய என்னுடலெங்கும் காயங்களே ---அன்று
கள்வன் செய்து வைத்த மாயங்களே -
களிப்பில் ஆழ்ந்தது நிஜமாக
புதிரும் புரிந்தது நலமாக --காதல்
பொங்கி மலர்ந்தது இனிதாக
தலைவன் என்னுடன் துணையானான் ---அவன்
தழுவி அணைத்து சுகம் தந்தான்
கலைகள் யாவையும் கற்க வைத்தான் ---என்னை
காற்றினில் ஏற்றி சுற்ற வைத்தான்
இப்படி இருந்தோம் சில காலம் ---இனி
எனக்கு இதுதான் நல்ல எதிர்காலம்
செப்படி வித்தைகள் அந்நாளில் ---அவன்
சீதனம் தந்தது என்தோளில்
உருகிக் கிடந்தேன் உறவாடி ---உலகில்
அவனே எனக்குச் சரிஜோடி
மருவிடும் போதினிலே மயக்கம் வரும் ---அவனை
மனதில் நினைத்தால் துணிச்சல் தரும்
பொன்னுடலில் இட்டான் பூக்கோலம் ---அவனை
புருஷனாய் அடைந்தது பொற்காலம்
கன்றிய என்னுடலெங்கும் காயங்களே ---அன்று
கள்வன் செய்து வைத்த மாயங்களே -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக