நிலவைக் கண்டதும் ஏனோ --என்
நெஞ்சம் குழைவதேன்
அலையில் ஆடும் சிறு படகு போல் --இன்று
எந்தன் ஆசை தடுமாறுதே
களவு செய்தவன் ---ஏனோ
காற்றாய் ஓடினான்
நினைத்து நினைத்து ஏன் ---நான்
நித்தம் அழுகிறேன்
விடையைக் கண்டிட ---இனி
விரும்புதே என்மனம்
கடையைத் திறந்திட்டும் ---எனக்கு
கண்ட பலன் என்ன
தடையை மீறினேன் ---ஒரு
தவறு செய்தேன் நான்
ஆசை கொண்டதால் ---இன்று
அல்லல் படுகிறேன்
இளைஞர் கூட்டமே ---நீவிர்
இரக்கம் கொள்ளுவீர்
உடமை தந்தவள் ----உம
உயிரினும் மேலவள்
சிரிக்க வையுங்கள் ---வாழ்க்கை
சீர்பெறச் செய்யுங்கள்
தவிக்கும் இளநெஞ்சம் ----உமது
தயவால் வாழட்டும்
நெஞ்சம் குழைவதேன்
அலையில் ஆடும் சிறு படகு போல் --இன்று
எந்தன் ஆசை தடுமாறுதே
களவு செய்தவன் ---ஏனோ
காற்றாய் ஓடினான்
நினைத்து நினைத்து ஏன் ---நான்
நித்தம் அழுகிறேன்
விடையைக் கண்டிட ---இனி
விரும்புதே என்மனம்
கடையைத் திறந்திட்டும் ---எனக்கு
கண்ட பலன் என்ன
தடையை மீறினேன் ---ஒரு
தவறு செய்தேன் நான்
ஆசை கொண்டதால் ---இன்று
அல்லல் படுகிறேன்
இளைஞர் கூட்டமே ---நீவிர்
இரக்கம் கொள்ளுவீர்
உடமை தந்தவள் ----உம
உயிரினும் மேலவள்
சிரிக்க வையுங்கள் ---வாழ்க்கை
சீர்பெறச் செய்யுங்கள்
தவிக்கும் இளநெஞ்சம் ----உமது
தயவால் வாழட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக