புதன், 31 ஜூலை, 2019

இளநெஞ்சம் 7 3 5

நிலவைக்    கண்டதும்      ஏனோ     --என்
நெஞ்சம்      குழைவதேன்
அலையில்    ஆடும்    சிறு  படகு  போல் --இன்று
எந்தன்      ஆசை      தடுமாறுதே
களவு      செய்தவன்    ---ஏனோ
காற்றாய்     ஓடினான்
நினைத்து   நினைத்து    ஏன்   ---நான்
நித்தம்       அழுகிறேன்
விடையைக்     கண்டிட   ---இனி
விரும்புதே      என்மனம்
கடையைத்   திறந்திட்டும்   ---எனக்கு
கண்ட    பலன்      என்ன
தடையை    மீறினேன்  ---ஒரு
தவறு     செய்தேன்    நான்
ஆசை     கொண்டதால்   ---இன்று
அல்லல்     படுகிறேன்
இளைஞர்     கூட்டமே   ---நீவிர்
இரக்கம்       கொள்ளுவீர்
உடமை     தந்தவள்    ----உம
உயிரினும்     மேலவள்
சிரிக்க      வையுங்கள்   ---வாழ்க்கை
சீர்பெறச்     செய்யுங்கள்
தவிக்கும்     இளநெஞ்சம்    ----உமது
தயவால்       வாழட்டும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக