திங்கள், 8 ஜூலை, 2019

காதலி 678

நிலவில்      வளர்ந்தவள்    ---அவள்
என்நினைவில்    மலர்ந்தவள்
பழகத்    தெரிந்தவள்   ---தினம்
பார்க்க    சுகமானவள் 

நீரில்      நடப்பவ ள்   --என்
நெஞ்சில்   இருப்பவள்
தேரைப்    போன்றவள்    ---எனக்கு
தேவியாய்   தெரிபவள்

சிரிக்கும்    அழகிலே   ---என்
சித்தம்    தடுமாறுமே
ஒலிக்கும்    கைவளை யோசையோ   --அவள்
உணர்வை    பறைசாற்றுமே

காற்றினில்     ஏறிவருவாள்    --தன து
காதலினைக்     கூறுவாள்
பார்க்கும்     மனிதர்களை   --அவள்
பக்கம்      இழுத்து  விடுவாள்

தொட்டுச்     சுவைக்கவில்லையே   ---அந்த
தோகை    எனக்காவாளோ
எட்டுத்     திசையதிர    ---அவள்
என்னிடம்      எப்போ    வருவாளோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக