வியாழன், 4 ஜூலை, 2019

சீதனம் 669

கண்ணுக்குள்     வந்தாயே    --என்
காதலைச்     சொன்னேன்
என்னுக்குள்   புகுந்தாயே   --இனி
என்ன  தான்   நான்   செய்குவேன்

கூரான    விழியால்    கொல்லுதல்     சரியா  --உன்
கோவை    இதழால்  குளிர் முத்தம்   தருவாய்
பாரா  முகமென்ன   பதிலென்ன  காணோம்   --உன்னை
பார்த்ததும்    விழுந்தவன்   பாகாக    ஆனேன்

இரவென்ன  பகலென்ன    எங்கேயோ    போச்சு   --என்
இளமை    உணர்வுகள்     எரிமலை    ஆச்சு
உறவாட    உன்னிடம்    உயிரையே  தருவேன்   --நீ
உளமார     வந்தாலே  இந்த   உலகையே   வெல்வேன்

கலையாடும்    உன்முகமோ  கலங்கரை  விளக்கம்   --உன்
காதலில்   விழுந்ததால்     கவலைகள்   தொடக்கம்
சிலைபோன்ற    மேனியால்   என் ஜீவனைக்    கொன்றாய்   --உன்
சிந்தனை   மட்டும்  தான்  எனக்கு   சீதனம்    பெண்னே

எந்நாளும்    உனைப்பாடி    எங்கேயும்    திரிவேன்  ---உன்
இருவிழி     வாசலில்     ஏழை நான்     நிற்பேன்
கண்ணாட்டி    உன்காதல்    கனவிலும்    மறவேன்   ---உன்னை
கல்யாணம்    செய்திட   இன்னும்   கடுமையாய்    உழைப்பேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக