கண்ணுக்குள் வந்தாயே --என்
காதலைச் சொன்னேன்
என்னுக்குள் புகுந்தாயே --இனி
என்ன தான் நான் செய்குவேன்
கூரான விழியால் கொல்லுதல் சரியா --உன்
கோவை இதழால் குளிர் முத்தம் தருவாய்
பாரா முகமென்ன பதிலென்ன காணோம் --உன்னை
பார்த்ததும் விழுந்தவன் பாகாக ஆனேன்
இரவென்ன பகலென்ன எங்கேயோ போச்சு --என்
இளமை உணர்வுகள் எரிமலை ஆச்சு
உறவாட உன்னிடம் உயிரையே தருவேன் --நீ
உளமார வந்தாலே இந்த உலகையே வெல்வேன்
கலையாடும் உன்முகமோ கலங்கரை விளக்கம் --உன்
காதலில் விழுந்ததால் கவலைகள் தொடக்கம்
சிலைபோன்ற மேனியால் என் ஜீவனைக் கொன்றாய் --உன்
சிந்தனை மட்டும் தான் எனக்கு சீதனம் பெண்னே
எந்நாளும் உனைப்பாடி எங்கேயும் திரிவேன் ---உன்
இருவிழி வாசலில் ஏழை நான் நிற்பேன்
கண்ணாட்டி உன்காதல் கனவிலும் மறவேன் ---உன்னை
கல்யாணம் செய்திட இன்னும் கடுமையாய் உழைப்பேன்
காதலைச் சொன்னேன்
என்னுக்குள் புகுந்தாயே --இனி
என்ன தான் நான் செய்குவேன்
கூரான விழியால் கொல்லுதல் சரியா --உன்
கோவை இதழால் குளிர் முத்தம் தருவாய்
பாரா முகமென்ன பதிலென்ன காணோம் --உன்னை
பார்த்ததும் விழுந்தவன் பாகாக ஆனேன்
இரவென்ன பகலென்ன எங்கேயோ போச்சு --என்
இளமை உணர்வுகள் எரிமலை ஆச்சு
உறவாட உன்னிடம் உயிரையே தருவேன் --நீ
உளமார வந்தாலே இந்த உலகையே வெல்வேன்
கலையாடும் உன்முகமோ கலங்கரை விளக்கம் --உன்
காதலில் விழுந்ததால் கவலைகள் தொடக்கம்
சிலைபோன்ற மேனியால் என் ஜீவனைக் கொன்றாய் --உன்
சிந்தனை மட்டும் தான் எனக்கு சீதனம் பெண்னே
எந்நாளும் உனைப்பாடி எங்கேயும் திரிவேன் ---உன்
இருவிழி வாசலில் ஏழை நான் நிற்பேன்
கண்ணாட்டி உன்காதல் கனவிலும் மறவேன் ---உன்னை
கல்யாணம் செய்திட இன்னும் கடுமையாய் உழைப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக