திங்கள், 29 ஜூலை, 2019

முல்லை வனம் 7 3 1

தொட்டுச்         சுவைத்தவன்     ---என்
தோளை       அணைத்தவன் 
விட்டுப்     பிரிந்ததென்ன    ---கிளியே
வெம்பித்      தவிப்பதென்ன

முல்லை      வனத்தினில்    ---அடர்
மூங்கில்     புதரினுள்
பள்ளிப்      பாடமென்ன   ---சகியே
படித்து      அறிந்ததென்ன

கொட்டும்      மழையினில்    ---என்
கூட        இருந்தவன்
கட்டி     அனைத்ததென்ன   ---கிளியே
காதல்     மறந்ததென்ன

பட்டு      இதழ்களில்    ---முத்திரை
இட்டுச்      சுவைத்தவன்
எட்டியே     போனதென்ன    ---கிளியே
ஏக்கம்      கொல்வதென்ன

எண்ணி      அழுகிறேன்   ---இருக்கும்
இளமை      துடிக்குதே
கன்னி      நலமாவேனோ    ---கிளியே
கள்ளன்      வருவானோடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக