தொட்டுச் சுவைத்தவன் ---என்
தோளை அணைத்தவன்
விட்டுப் பிரிந்ததென்ன ---கிளியே
வெம்பித் தவிப்பதென்ன
முல்லை வனத்தினில் ---அடர்
மூங்கில் புதரினுள்
பள்ளிப் பாடமென்ன ---சகியே
படித்து அறிந்ததென்ன
கொட்டும் மழையினில் ---என்
கூட இருந்தவன்
கட்டி அனைத்ததென்ன ---கிளியே
காதல் மறந்ததென்ன
பட்டு இதழ்களில் ---முத்திரை
இட்டுச் சுவைத்தவன்
எட்டியே போனதென்ன ---கிளியே
ஏக்கம் கொல்வதென்ன
எண்ணி அழுகிறேன் ---இருக்கும்
இளமை துடிக்குதே
கன்னி நலமாவேனோ ---கிளியே
கள்ளன் வருவானோடி
தோளை அணைத்தவன்
விட்டுப் பிரிந்ததென்ன ---கிளியே
வெம்பித் தவிப்பதென்ன
முல்லை வனத்தினில் ---அடர்
மூங்கில் புதரினுள்
பள்ளிப் பாடமென்ன ---சகியே
படித்து அறிந்ததென்ன
கொட்டும் மழையினில் ---என்
கூட இருந்தவன்
கட்டி அனைத்ததென்ன ---கிளியே
காதல் மறந்ததென்ன
பட்டு இதழ்களில் ---முத்திரை
இட்டுச் சுவைத்தவன்
எட்டியே போனதென்ன ---கிளியே
ஏக்கம் கொல்வதென்ன
எண்ணி அழுகிறேன் ---இருக்கும்
இளமை துடிக்குதே
கன்னி நலமாவேனோ ---கிளியே
கள்ளன் வருவானோடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக