என் இனிய தோழி வாடி --அடியே
எதற்கு என்னிடம் கேலி
கனவில் கண்டேன் அவனை ---எனக்கு
கச்சிதமாய் பொருந்தும் யுவனே
அரும்பு மீசை அழகன் ---அவன்
ஆளை அசத்தும் வீரன்
குறும்பு பார்வை பார்ப்பான் --என்னை
கொள்ளை யிட்டுச் சிரிப்பான்
மையல் தந்த மயக்கம் ---என்
மனதில் இல்லையே கலக்கம்
ஐயம் துறந்தேன் அவனால் ---என்னை
அள்ளி அணைத்தான் அன்பால்
இரண்டும் ஒன்றென ஆனோம் ---எமக்குள்
இடைவெளி என்பதும் காணோம்
ஒன்றிப் போனோம் அந்நாள் ---இனி
உறவில் மலரும் திருநாள்
பிள்ளை நிறையப் பிறக்கும் ---அவர்
பெருமை சொல்லித் தழைக்கும்
கள்ளம் இனியிலை தோழி ---என்
காதல் கணவன் வாழி
எதற்கு என்னிடம் கேலி
கனவில் கண்டேன் அவனை ---எனக்கு
கச்சிதமாய் பொருந்தும் யுவனே
அரும்பு மீசை அழகன் ---அவன்
ஆளை அசத்தும் வீரன்
குறும்பு பார்வை பார்ப்பான் --என்னை
கொள்ளை யிட்டுச் சிரிப்பான்
மையல் தந்த மயக்கம் ---என்
மனதில் இல்லையே கலக்கம்
ஐயம் துறந்தேன் அவனால் ---என்னை
அள்ளி அணைத்தான் அன்பால்
இரண்டும் ஒன்றென ஆனோம் ---எமக்குள்
இடைவெளி என்பதும் காணோம்
ஒன்றிப் போனோம் அந்நாள் ---இனி
உறவில் மலரும் திருநாள்
பிள்ளை நிறையப் பிறக்கும் ---அவர்
பெருமை சொல்லித் தழைக்கும்
கள்ளம் இனியிலை தோழி ---என்
காதல் கணவன் வாழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக