ஞாயிறு, 14 ஜூலை, 2019

6 9 9

கள்ளூறும்     காவியம்    ---அவன்
கண்ணீரில்     ஓவியம்
சொல்லாமல்     கிடந்தவன்   ---வந்த
சொர்க்கத்தை   மறந்தவன்

பெண்ணோடு    தொடர்ந்தவன்   ---தனது
பிரியத்தை      மறைத்தவன்
கண்ணோடு     கலந்தவன்   ---எனோ
கண்ணியம்   துறந்தவன்

இரவெல்லாம்     விழித்தவன்    ---பெண்ணால்
ஏங்கியே      தவித்தவன்
உறவுக்கு     அலைந்தவன்   ---அவளை
உயிராக      நினைத்தவன்

துன்பத்தை      அணைத்தவன்     ---நாளும்
துயரினில்     மிதப்பவன்
கண்பட்டு      வீழ்ந்தவன்   ---பெண்
காதலில்      துடிப்பவன்

எந்நாள்       தீருமோ    ---இவன்
எதிர் காலம்     தேறுமோ
பொன்மனச்     செல்வியே    --நீ தான்
புனர்வாழ்வு     நல்குவாய்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக