இணையை த் தேடி தினமும் அலைந்தேன் ---உனது
இதய வாசல் திறக்குமென கனவுகள் கண்டேனே
கனவாகிப் போனதோ என் காதல் நினைவுகள் --உயிர்
கண்மணி உனது நெஞ்சில் கருணை இல்லையோ
களங்க மில்லாத அன்பினாலே காதல் வந்ததே --நாம்
காலம் முழுதும் வாழ நீயும் கொஞ்சம் கருணை செய்யம்மா
பளிங்கு போல உனது மேனி பக்கம் இழுக்குதே --உன்னை
பார்த்து ரசிக்க எனது மனம் தினம் பரிதவிக்குதே
நாளும் நல்லதாய் பார்க்கலாமா நமது திருமணம் ---இந்த
நங்கை கரம் பிடிக்க எனோ நானும் நாணமாகினேன்
உயிரும் உடலும் போல இந்த உலகில் வாழலாம் ---நாம்
உள்ள காலம் முழுதும் கூட ஒன்றாய் வாழலாம்
மாடி மனை செல்வமென்ன என்மனைவி பெரியவள் ---உனது
மடியில் கிடைக்கும் சுகமதையே மனமும் விரும்புது
கோடி காலம் ஓடினாலும் நம் குடும்பம் வாழலாம் ---என்
கோவைக் கனி உனது பார்வை குளிர்ந்த மேகமே
ஆனவரை கெஞ்சி னேன் நீயும் அன்பு காட்டம்மா ---என்னை
அள்ளி எடுத்து உனது நெஞ்சில் அணைத்துக் கொள்ளம்மா
தேனும் பாலும் சேர்ந்தது போல் நம் திருமணமாகும் ---என்
தேவி உன்னை என்றும் நானே தினமும் போற்றுவேன்
இதய வாசல் திறக்குமென கனவுகள் கண்டேனே
கனவாகிப் போனதோ என் காதல் நினைவுகள் --உயிர்
கண்மணி உனது நெஞ்சில் கருணை இல்லையோ
களங்க மில்லாத அன்பினாலே காதல் வந்ததே --நாம்
காலம் முழுதும் வாழ நீயும் கொஞ்சம் கருணை செய்யம்மா
பளிங்கு போல உனது மேனி பக்கம் இழுக்குதே --உன்னை
பார்த்து ரசிக்க எனது மனம் தினம் பரிதவிக்குதே
நாளும் நல்லதாய் பார்க்கலாமா நமது திருமணம் ---இந்த
நங்கை கரம் பிடிக்க எனோ நானும் நாணமாகினேன்
உயிரும் உடலும் போல இந்த உலகில் வாழலாம் ---நாம்
உள்ள காலம் முழுதும் கூட ஒன்றாய் வாழலாம்
மாடி மனை செல்வமென்ன என்மனைவி பெரியவள் ---உனது
மடியில் கிடைக்கும் சுகமதையே மனமும் விரும்புது
கோடி காலம் ஓடினாலும் நம் குடும்பம் வாழலாம் ---என்
கோவைக் கனி உனது பார்வை குளிர்ந்த மேகமே
ஆனவரை கெஞ்சி னேன் நீயும் அன்பு காட்டம்மா ---என்னை
அள்ளி எடுத்து உனது நெஞ்சில் அணைத்துக் கொள்ளம்மா
தேனும் பாலும் சேர்ந்தது போல் நம் திருமணமாகும் ---என்
தேவி உன்னை என்றும் நானே தினமும் போற்றுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக