திங்கள், 8 ஜூலை, 2019

தெய்வீகம் 676

 இணையை த்   தேடி   தினமும்   அலைந்தேன்   ---உனது
இதய வாசல்     திறக்குமென    கனவுகள்  கண்டேனே
கனவாகிப்   போனதோ    என்  காதல்   நினைவுகள்  --உயிர்
கண்மணி   உனது   நெஞ்சில்    கருணை   இல்லையோ

களங்க   மில்லாத    அன்பினாலே    காதல்  வந்ததே   --நாம்
காலம்    முழுதும்    வாழ   நீயும்  கொஞ்சம்  கருணை  செய்யம்மா
பளிங்கு   போல   உனது    மேனி    பக்கம்    இழுக்குதே   --உன்னை
பார்த்து     ரசிக்க   எனது     மனம்   தினம்    பரிதவிக்குதே

நாளும்    நல்லதாய்    பார்க்கலாமா    நமது    திருமணம்  ---இந்த
நங்கை     கரம்  பிடிக்க    எனோ    நானும்    நாணமாகினேன்
உயிரும்   உடலும்     போல    இந்த     உலகில்     வாழலாம்   ---நாம்
உள்ள     காலம்    முழுதும்     கூட     ஒன்றாய்     வாழலாம்



மாடி  மனை   செல்வமென்ன    என்மனைவி     பெரியவள்    ---உனது
மடியில்    கிடைக்கும்   சுகமதையே    மனமும்   விரும்புது
கோடி    காலம்   ஓடினாலும்     நம்    குடும்பம்    வாழலாம்   ---என்
கோவைக்   கனி     உனது    பார்வை     குளிர்ந்த     மேகமே

ஆனவரை    கெஞ்சி     னேன்   நீயும்     அன்பு     காட்டம்மா    ---என்னை
அள்ளி   எடுத்து   உனது    நெஞ்சில்    அணைத்துக்   கொள்ளம்மா
தேனும்     பாலும்     சேர்ந்தது   போல்   நம்  திருமணமாகும்    ---என்
தேவி   உன்னை    என்றும்     நானே     தினமும்    போற்றுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக