புதன், 17 ஜூலை, 2019

ஆனந்தம் 7 1 1

காதலி       நீதான்       கண்மணி   ---என்னை
கவனமாய்ப்     பாத்துக்க     அம்மணி
மோதல்         நமக்குள்   வேண்டாமே   ---என்
மோகத்தை    தூண்டுதல்    நீதானே
குறும்பு     பேச்சுக்கள்    கூடாது  --உன்
கோணங்கி    சேட்டைகள்    ஆகாது
கரும்பாகப்    பேசினால்   உதைப்பேன்  ---உன்னை
கால்களில்    போட்டுநான்   மிதிப்பேன்
அன்பாகப்     பேசினால்     கோபமா   --என்னை
அடிப்பேன்   என்பதும்    நியாயமா
பண்பினைக்    காப்பவள்    பெண்ணல்லவா   --உன்னை
பழகிடத்         துடிப்பது        நானல்லவா
வேலை      வெட்டிக    ஏதுமிலே   ---உலக
விவரம்       உனக்குப்     புரியவில்லே
கோழையை     மணந்திட    யார் வருவார்   --உன்
குறுக்குப்     புத்திக்கு      யார்    மசிவார்
பகலும்     இரவுமாய்     உழைத்திடுவேன்   ---என்
பத்தினி      உன்னையும்   காத்திடுவேன்
புகழ்ந்து    உன்வாய்     பேசாதா     --என்னையும்
புருஷனாய்       ஏத்துக்க     கூடாதா
போனது      போகட்டும்     விட்டு விடு   ---உன்னை
புரிந்து       கொண்டேன்     கவலை விடு
ஆனந்தமாக      மணம்     முடிப்போம்   ---நாம
அளவுடன்     குழந்தைக    பெத்துக்குவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக