அலைகள் சூழும் கடலில் --பல்
ஆயிரம் உயிர்கள் வசிக்கும்
நிலையை உணர்ந்தவர் வாழ்வில் ---இங்கு
நிம்மதி என்றைக்கும் நிலைக்கும்
கலைகள் சிறந்த நாட்டில் ---இறைவன்
கருணை நிரம்பி வழியும்
பிழைகள் நிறைந்த வாழ்வில் ---என்றும்
பெரிய சரிவுகள் தொடரும்
குறையை மறந்திட தெரிந்தால் ---நம்
குடும்பம் நன்றாய் செழிக்கும்
கரையை உடைக்கும் வெள்ளம் ---வீணாய்
கடும் சேதம் நிறையவே கொடுக்கும்
அன்பைக் காட்டி வாழ்ந்தால் ---உலகில்
ஐயன் அருளும் கிடைக்கும்
பண்பை ஊட்டி வளர்த்தால் ---நாட்டில்
பகைமை எண்ணங்கள் மறையும்
எடுத்து எடுத்துக் கொடுக்க ---உனக்கு
இன்னும் செல்வங்கள் சேரும்
படித்து படித்து சொல்வேன் ---நல்ல
பாதையை உணர்ந்து கொள்வாய்
ஆயிரம் உயிர்கள் வசிக்கும்
நிலையை உணர்ந்தவர் வாழ்வில் ---இங்கு
நிம்மதி என்றைக்கும் நிலைக்கும்
கலைகள் சிறந்த நாட்டில் ---இறைவன்
கருணை நிரம்பி வழியும்
பிழைகள் நிறைந்த வாழ்வில் ---என்றும்
பெரிய சரிவுகள் தொடரும்
குறையை மறந்திட தெரிந்தால் ---நம்
குடும்பம் நன்றாய் செழிக்கும்
கரையை உடைக்கும் வெள்ளம் ---வீணாய்
கடும் சேதம் நிறையவே கொடுக்கும்
அன்பைக் காட்டி வாழ்ந்தால் ---உலகில்
ஐயன் அருளும் கிடைக்கும்
பண்பை ஊட்டி வளர்த்தால் ---நாட்டில்
பகைமை எண்ணங்கள் மறையும்
எடுத்து எடுத்துக் கொடுக்க ---உனக்கு
இன்னும் செல்வங்கள் சேரும்
படித்து படித்து சொல்வேன் ---நல்ல
பாதையை உணர்ந்து கொள்வாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக