வெள்ளி, 5 ஜூலை, 2019

நல்ல பாதை 673

அலைகள்     சூழும்    கடலில்    --பல்
ஆயிரம்     உயிர்கள்   வசிக்கும்
நிலையை    உணர்ந்தவர்   வாழ்வில்   ---இங்கு
நிம்மதி   என்றைக்கும்    நிலைக்கும்

கலைகள்    சிறந்த     நாட்டில்    ---இறைவன்
கருணை      நிரம்பி     வழியும்
பிழைகள்    நிறைந்த    வாழ்வில்   ---என்றும்
பெரிய     சரிவுகள்     தொடரும்

குறையை    மறந்திட   தெரிந்தால்   ---நம்
குடும்பம்      நன்றாய்     செழிக்கும்
கரையை     உடைக்கும்    வெள்ளம்  ---வீணாய்
கடும் சேதம்    நிறையவே    கொடுக்கும்

அன்பைக்     காட்டி     வாழ்ந்தால்   ---உலகில்
ஐயன்       அருளும்    கிடைக்கும்
பண்பை      ஊட்டி     வளர்த்தால்   ---நாட்டில்
பகைமை     எண்ணங்கள்   மறையும்

எடுத்து     எடுத்துக்       கொடுக்க   ---உனக்கு
இன்னும்     செல்வங்கள்     சேரும்
படித்து    படித்து     சொல்வேன்    ---நல்ல
பாதையை      உணர்ந்து    கொள்வாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக