வெள்ளி, 5 ஜூலை, 2019

விடி வெள்ளி 675

கலையான   உன்மேனி     பண்பட்டது  --என்
கண்களால்   எழில்மேனி    புண்ணானது
நிலையான நம்காதல்    பண்பாடுமே   --நீ
சிரிக்கின்ற  சிரிப்பொலி    விண்முட்டுமே

இரவாகி      பொழுதென     வளர்கின்றவள்   --உன்
எழிலான   திருமேனி     மலர்கின்றவள்
கனவாகி    நனவாகி     கமழ்கின்றவள்   ---என்
கவிதையில்    எந்நாளும்     வாழ்கின்றவள்

என்னோடு   உயிராக     உருவானவள்   ---என்
உள்ளத்தில்    நிலையாக  இருக்கின்றவள்
தேனாகப்      பாலாகத்     தெரிகின்றவள்    ---இந்த
திருத்தொண்டன்    தொழுகின்ற    பொருளானவள்

நானென்றும்    நீயாக     வரவேண்டுமே   ---என்
நாயகி    உனக்கென்றும்    துணைசேருவேன்
வீணென்று     எனைத்தள்ளி    விலக்கிடாதே   ---என்
விடி வெள்ளி     என்வாழ்வில்    வழிகாட்டுவாய்

எழுதுகிற       பாட்டெல்லாம்    உனக்காகவே    --என்
இளமைக்கு    விருந்தாக நீ     வரவேண்டுமே
பண்புள்ள       என்வாழ்வு      சுகமாகுமா   --உன்
பளிங்கான      பொன்மேனி      எனக்காகுமா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக