கலையான உன்மேனி பண்பட்டது --என்
கண்களால் எழில்மேனி புண்ணானது
நிலையான நம்காதல் பண்பாடுமே --நீ
சிரிக்கின்ற சிரிப்பொலி விண்முட்டுமே
இரவாகி பொழுதென வளர்கின்றவள் --உன்
எழிலான திருமேனி மலர்கின்றவள்
கனவாகி நனவாகி கமழ்கின்றவள் ---என்
கவிதையில் எந்நாளும் வாழ்கின்றவள்
என்னோடு உயிராக உருவானவள் ---என்
உள்ளத்தில் நிலையாக இருக்கின்றவள்
தேனாகப் பாலாகத் தெரிகின்றவள் ---இந்த
திருத்தொண்டன் தொழுகின்ற பொருளானவள்
நானென்றும் நீயாக வரவேண்டுமே ---என்
நாயகி உனக்கென்றும் துணைசேருவேன்
வீணென்று எனைத்தள்ளி விலக்கிடாதே ---என்
விடி வெள்ளி என்வாழ்வில் வழிகாட்டுவாய்
எழுதுகிற பாட்டெல்லாம் உனக்காகவே --என்
இளமைக்கு விருந்தாக நீ வரவேண்டுமே
பண்புள்ள என்வாழ்வு சுகமாகுமா --உன்
பளிங்கான பொன்மேனி எனக்காகுமா
கண்களால் எழில்மேனி புண்ணானது
நிலையான நம்காதல் பண்பாடுமே --நீ
சிரிக்கின்ற சிரிப்பொலி விண்முட்டுமே
இரவாகி பொழுதென வளர்கின்றவள் --உன்
எழிலான திருமேனி மலர்கின்றவள்
கனவாகி நனவாகி கமழ்கின்றவள் ---என்
கவிதையில் எந்நாளும் வாழ்கின்றவள்
என்னோடு உயிராக உருவானவள் ---என்
உள்ளத்தில் நிலையாக இருக்கின்றவள்
தேனாகப் பாலாகத் தெரிகின்றவள் ---இந்த
திருத்தொண்டன் தொழுகின்ற பொருளானவள்
நானென்றும் நீயாக வரவேண்டுமே ---என்
நாயகி உனக்கென்றும் துணைசேருவேன்
வீணென்று எனைத்தள்ளி விலக்கிடாதே ---என்
விடி வெள்ளி என்வாழ்வில் வழிகாட்டுவாய்
எழுதுகிற பாட்டெல்லாம் உனக்காகவே --என்
இளமைக்கு விருந்தாக நீ வரவேண்டுமே
பண்புள்ள என்வாழ்வு சுகமாகுமா --உன்
பளிங்கான பொன்மேனி எனக்காகுமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக