கனவில் வந்தவள் காரிகை --அவளை
கண்டதும் மனதில் பேரிகை
கைகளில் கிடைத்த தூரிகை ---நான்
காதலன் ஆகுதல் கோரிக்கை
நினைவில் ஏன் அவள் நிக்கிறாள் ---அதை
நினைத்து நானும் சொக்குரேன்
கணைகளை வீசியவள் கொல்கிறாள் ---இதனை
கண்டதும் மயங்கியே நிற்கிரேன்
சிரிப்பால் என்னை சிறைப்பிடித்தாள் ---அவள்
செம்பவள வாயால் முத்துயிர்த்தாள்
பொறுப்பாய் என்னிடம் வருவாளா --அந்த
பூவையை மணந்திடும் நிலைவருமா
இளமை படை கொண்டு போரிடுவாள் ---தன்னை
எதிர்த்தவர் தம்மையும் வென்றிடுவாள்
செழுமை குலுங்கிடும் தேனமுதம் ---இந்த
தேவிக்கு ஈடா அந்த வானமுதம்
நிலவினில் என்னிடம் நெருங்குகிறான் ---அவளை
நினைத்தால் நானும் பொங்குகிறேன்
உலகினர் மெச்சிடும் நாள் வருமா ---என்னுடன்
உத்தமி திருமணம் நடந்திடுமா
கண்டதும் மனதில் பேரிகை
கைகளில் கிடைத்த தூரிகை ---நான்
காதலன் ஆகுதல் கோரிக்கை
நினைவில் ஏன் அவள் நிக்கிறாள் ---அதை
நினைத்து நானும் சொக்குரேன்
கணைகளை வீசியவள் கொல்கிறாள் ---இதனை
கண்டதும் மயங்கியே நிற்கிரேன்
சிரிப்பால் என்னை சிறைப்பிடித்தாள் ---அவள்
செம்பவள வாயால் முத்துயிர்த்தாள்
பொறுப்பாய் என்னிடம் வருவாளா --அந்த
பூவையை மணந்திடும் நிலைவருமா
இளமை படை கொண்டு போரிடுவாள் ---தன்னை
எதிர்த்தவர் தம்மையும் வென்றிடுவாள்
செழுமை குலுங்கிடும் தேனமுதம் ---இந்த
தேவிக்கு ஈடா அந்த வானமுதம்
நிலவினில் என்னிடம் நெருங்குகிறான் ---அவளை
நினைத்தால் நானும் பொங்குகிறேன்
உலகினர் மெச்சிடும் நாள் வருமா ---என்னுடன்
உத்தமி திருமணம் நடந்திடுமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக