திங்கள், 8 ஜூலை, 2019

உத்தமி 680

கனவில்      வந்தவள்    காரிகை    --அவளை
கண்டதும்    மனதில்     பேரிகை
கைகளில்    கிடைத்த    தூரிகை   ---நான்
காதலன்     ஆகுதல்     கோரிக்கை

நினைவில்    ஏன் அவள்   நிக்கிறாள்   ---அதை
நினைத்து   நானும்   சொக்குரேன்
கணைகளை    வீசியவள்    கொல்கிறாள்  ---இதனை
கண்டதும்       மயங்கியே    நிற்கிரேன்

சிரிப்பால்     என்னை     சிறைப்பிடித்தாள்   ---அவள்
செம்பவள     வாயால்    முத்துயிர்த்தாள்
பொறுப்பாய்     என்னிடம்    வருவாளா  --அந்த
பூவையை     மணந்திடும்     நிலைவருமா

இளமை    படை  கொண்டு    போரிடுவாள்    ---தன்னை
எதிர்த்தவர்    தம்மையும்      வென்றிடுவாள் 
செழுமை     குலுங்கிடும்      தேனமுதம்     ---இந்த
தேவிக்கு      ஈடா        அந்த     வானமுதம்

நிலவினில்     என்னிடம்   நெருங்குகிறான்   ---அவளை
நினைத்தால்      நானும்      பொங்குகிறேன் 
உலகினர்       மெச்சிடும்     நாள்     வருமா     ---என்னுடன்
உத்தமி        திருமணம்      நடந்திடுமா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக