ஞாயிறு, 14 ஜூலை, 2019

நலம் 7 0 0

  வேலோடு        வருவாயா        வேல்  அய்யா    ---வந்த 
  வினை தீர்க்க     வருவாயா     சொல்லையா 
பாலோடு       பழம் யாவும்      உனக்காகவே   ---சூழும் 
பழி    தீர்க்க     வர  வேண்டும்    எனக்காகவே 

குற வள்ளி    தினை  காக்க      வனம்     ஏகினாள்   ---நீ 
குன்றாத     காதல்   கொண்டு  அவளின்  துணையாகினாய் 
மறவாத     உன்னடியார்கள்     மனம்      வாழ்கிறாய்    ---புள்ளி 
மயிலேறி    வலம்    வந்து     இந்த   நிலம்    ஆள்கிறாய் 

தமிழாகி    உலவுகின்ற    எங்கள்     சரவணனே   ---பார்வதி 
தாயின்     திருக்  கரத்தாலே    வேல்    வாங்கினாய் 
அமிழ்தமாம்     உந்தன்   திருமேனி    அழகானது    ---உன் 
அடியார்கள்    தம்  வாழ்வு    என்றும்   நலமானது 

பகை  வெல்ல    திருக் குமரா    நீயும்    படை தாங்கினாய்  ---வரும் 
பகை வர்கள்     மருண்டோட     கணை    ஏந்தினாய் 
நகை சிந்தும்    உன் எழில்   முகம்    நலம்    சேர்க்குமே   ---தெய்வ 
நாயகா       உன்குரலோசை  எவர்க்கும்    பலம்    நல்குமே 

முருகா      என்றோத     விதி    மாறுமே    ---வரும் 
மோகங்கள்    நம்மை    விட்டுப்    பறந்தோடுமே 
ஒருக்காலும்     மறவாதீர்     மயில் வேலனை   ---அவனை 
உளமாற      துதித்தாலே    பொருள் வளம்     சூழுமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக