அழகுப் பிள்ளை பிறக்கும் ---என்
அம்மா போல இருக்கும்
களங்கம் இன்றி சிரிக்கும் ---அதன்
கால்கள் நம்மை உதைக்கும்
கண்ணை சுழற்றிப் பார்க் கும் --நம்
கருத்தைப் பற்றி இழுக்கும்
புன்னகை காட்டி சிரிக்கும் ---அதில்
புதுமை நிறைந்து இருக்கும்
பஞ்சு போல கைகள் ---நல்ல
பளிங்கு போல கால்கள்
அஞ்சு விரல்களைக் காட்டி --நம்மை
அழைத்தல் மிகவும் அழகு
இரவில் அதிகம் விழிக்கும் ---சிறிது
இரைச்சல் கேட்டால் கத்தும்
உறவை அதிகம் பெருக்கும் ---அதில்
உண்மை பாசம் தெரியும்
களங்கம் இல்லா த மனதிலே ---நம்
கடவுள் வாசம் செய்வாரே
மடமை நீங்கி வாழலாம் --நல்ல
மகத்துவங்கள் நமக்குச் சேரலாம்
கடவுள் தந்திடும் கொடைதான் --இது
காலம் தருகின்ற விடைதான்
குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான் ---நாம்
குறிப்பாய் உணர்வது நன்றுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக