வியாழன், 25 ஜூலை, 2019

குழந்தை 7 2 5


அழகுப்        பிள்ளை        பிறக்கும்   ---என் 
அம்மா       போல       இருக்கும் 
களங்கம்      இன்றி   சிரிக்கும்    ---அதன் 
கால்கள்      நம்மை   உதைக்கும் 
கண்ணை    சுழற்றிப்    பார்க் கும்  --நம்  
கருத்தைப்   பற்றி     இழுக்கும் 
புன்னகை   காட்டி    சிரிக்கும்  ---அதில் 
புதுமை     நிறைந்து    இருக்கும் 
பஞ்சு       போல   கைகள்   ---நல்ல 
பளிங்கு    போல    கால்கள் 
அஞ்சு     விரல்களைக்    காட்டி   --நம்மை 
அழைத்தல்    மிகவும்     அழகு 
இரவில்     அதிகம்     விழிக்கும்  ---சிறிது 
இரைச்சல்     கேட்டால்     கத்தும் 
உறவை     அதிகம்      பெருக்கும் ---அதில் 
உண்மை     பாசம்     தெரியும் 
களங்கம்     இல்லா த   மனதிலே   ---நம் 
கடவுள்       வாசம்      செய்வாரே 
மடமை     நீங்கி     வாழலாம்    --நல்ல 
மகத்துவங்கள்    நமக்குச்   சேரலாம் 
கடவுள்    தந்திடும்     கொடைதான்   --இது 
காலம்      தருகின்ற     விடைதான் 
குழந்தையும்    தெய்வமும்    ஒன்றுதான்   ---நாம் 
குறிப்பாய்      உணர்வது     நன்றுதான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக