வந்தது என்ன வாழ்க்கையிலே --இதில்
வரவும் செலவும் மிச்சமில்லை
நொந்தது என்பது கணக்கிலடா ---இதனை
நுண்ணறிவாலே நீயும் புரிந்து கொள்ளடா
பிள்ளைகள் நெஞ்சிலே கள்ளமில்லையே ---அவர்க்கு
பேதமை எண்ணம் வருவதில்லையே
கள்ளமே இல்லாத வெள்ளை மனம் ---அது
கடவுள் வாழ்கிற புனித இடம்
விலங்குகள் வாழ்விலும் நீதியுண்டு ---அவை
விரும்பும் முறையிலே வாழ்வதுண்டு
கலங்கரை விளக்கமாய் இருந்துவிடு ---மன
கவலைகள் தீர்த்திட துணிந்து எழு
நல்லதை எங்கிலும் செய்து விடு ---அதுவே
நமக்கு துணைவரும் அறிந்துவிடு
உள்ளதை பிறர்க்கும் கொடுத்து விடு ---அவர்
உயர்வினில் மகிழ்வினைப் பெற்றுவிடு
பெண்களை பெருமையாய் நினைத்து விடு --அவர்கள்
பேசும் தெய்வம் என்று தொழு
மண்ணகம் செழித்திட பாடுபடு ---தாயின்
மானத்தைக் காத்திட துடித்து எழு
வரவும் செலவும் மிச்சமில்லை
நொந்தது என்பது கணக்கிலடா ---இதனை
நுண்ணறிவாலே நீயும் புரிந்து கொள்ளடா
பிள்ளைகள் நெஞ்சிலே கள்ளமில்லையே ---அவர்க்கு
பேதமை எண்ணம் வருவதில்லையே
கள்ளமே இல்லாத வெள்ளை மனம் ---அது
கடவுள் வாழ்கிற புனித இடம்
விலங்குகள் வாழ்விலும் நீதியுண்டு ---அவை
விரும்பும் முறையிலே வாழ்வதுண்டு
கலங்கரை விளக்கமாய் இருந்துவிடு ---மன
கவலைகள் தீர்த்திட துணிந்து எழு
நல்லதை எங்கிலும் செய்து விடு ---அதுவே
நமக்கு துணைவரும் அறிந்துவிடு
உள்ளதை பிறர்க்கும் கொடுத்து விடு ---அவர்
உயர்வினில் மகிழ்வினைப் பெற்றுவிடு
பெண்களை பெருமையாய் நினைத்து விடு --அவர்கள்
பேசும் தெய்வம் என்று தொழு
மண்ணகம் செழித்திட பாடுபடு ---தாயின்
மானத்தைக் காத்திட துடித்து எழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக