திங்கள், 29 ஜூலை, 2019

மின்மினி 7 3 0

கண்வழி         புகுந்தாள்     ---என்
கருத்தினில்     மலர்ந்தாள்
மின்மினியாய்     பிரிந்தாள்   ---அவள்
மீண்டும்      இவண்     வருவாளா

தென்றலில்       நுழைந்தாள்    ---காதல்
தேனினை       சொரிந்தாள்
நன்றியை      நான்    மறவேன்   ---நாயகி
அவளென்பது     வீண்தானா

காற்றினில்      கலந்தாள்     --அந்த
ககனத்தில்    மிதந்தாள் 
வேற்றுமை     என்பது     ஏனோ    ---நான்
விரும்புதல்     சரியில்லை தானோ

ஆசையில்     அணைப்பேன்   ---அவளை
அனுதினம்      நினைப்பேன்
மோசம்       செய்தது     ஏனோ   ---நான்
மோகத்தில்      வாடுதல் தானோ

கடவுளைக்       காண்பேன்   ---அவர்
கருணையைக்     கேட்பேன்
மடமையை     நீக்கிட     வருவார்    ---என்
மனதினில்     மகிழ்ச்சியைத்     தருவார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக