கண்வழி புகுந்தாள் ---என்
கருத்தினில் மலர்ந்தாள்
மின்மினியாய் பிரிந்தாள் ---அவள்
மீண்டும் இவண் வருவாளா
தென்றலில் நுழைந்தாள் ---காதல்
தேனினை சொரிந்தாள்
நன்றியை நான் மறவேன் ---நாயகி
அவளென்பது வீண்தானா
காற்றினில் கலந்தாள் --அந்த
ககனத்தில் மிதந்தாள்
வேற்றுமை என்பது ஏனோ ---நான்
விரும்புதல் சரியில்லை தானோ
ஆசையில் அணைப்பேன் ---அவளை
அனுதினம் நினைப்பேன்
மோசம் செய்தது ஏனோ ---நான்
மோகத்தில் வாடுதல் தானோ
கடவுளைக் காண்பேன் ---அவர்
கருணையைக் கேட்பேன்
மடமையை நீக்கிட வருவார் ---என்
மனதினில் மகிழ்ச்சியைத் தருவார்
கருத்தினில் மலர்ந்தாள்
மின்மினியாய் பிரிந்தாள் ---அவள்
மீண்டும் இவண் வருவாளா
தென்றலில் நுழைந்தாள் ---காதல்
தேனினை சொரிந்தாள்
நன்றியை நான் மறவேன் ---நாயகி
அவளென்பது வீண்தானா
காற்றினில் கலந்தாள் --அந்த
ககனத்தில் மிதந்தாள்
வேற்றுமை என்பது ஏனோ ---நான்
விரும்புதல் சரியில்லை தானோ
ஆசையில் அணைப்பேன் ---அவளை
அனுதினம் நினைப்பேன்
மோசம் செய்தது ஏனோ ---நான்
மோகத்தில் வாடுதல் தானோ
கடவுளைக் காண்பேன் ---அவர்
கருணையைக் கேட்பேன்
மடமையை நீக்கிட வருவார் ---என்
மனதினில் மகிழ்ச்சியைத் தருவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக