கண்கள் வழியே நுழைவது ---பின்பு
காதல் என்று மலர்வது
பெண்ணை ஆணை இணைப்பது ---பிறர்
பேசுகின்ற இனிய பொருளது
இருவர் மனங்களை சேர்ப்பது ---இது
இரவினைப் பகலென காண்பது
ஒருவரை மட்டும் நினைப்பது ---இந்த
உலகில் என்றும் வாழ்வது
கூடியே வாழ்ந்திட வைப்பது ---பலரின்
குடும்பங்கள் எரிமலை ஆவது
ஓடிக் களைத்து உழல்வது ---சிலர்
உயிர்கள் மண்ணில் மறைவது
இறைவன் படைத்த உயிர்களில் ---என்றும்
ஏற்றத் தாழ்வுகள் இல்லையே
வரைமுறை இல்லா மனித வாழ்விலே ---வீணில்
வன்மம் பகைமை கள் தொல்லையே
காதல் செய்குவீர் மாந்தரே ---அதில்
கவனம் வேண்டும் வாழ்விலே
மோதல் எண்ணங்கள் போதுமே ---இதனை
முற்றிலும் உணர்ந்தால் லாபமே
காதல் என்று மலர்வது
பெண்ணை ஆணை இணைப்பது ---பிறர்
பேசுகின்ற இனிய பொருளது
இருவர் மனங்களை சேர்ப்பது ---இது
இரவினைப் பகலென காண்பது
ஒருவரை மட்டும் நினைப்பது ---இந்த
உலகில் என்றும் வாழ்வது
கூடியே வாழ்ந்திட வைப்பது ---பலரின்
குடும்பங்கள் எரிமலை ஆவது
ஓடிக் களைத்து உழல்வது ---சிலர்
உயிர்கள் மண்ணில் மறைவது
இறைவன் படைத்த உயிர்களில் ---என்றும்
ஏற்றத் தாழ்வுகள் இல்லையே
வரைமுறை இல்லா மனித வாழ்விலே ---வீணில்
வன்மம் பகைமை கள் தொல்லையே
காதல் செய்குவீர் மாந்தரே ---அதில்
கவனம் வேண்டும் வாழ்விலே
மோதல் எண்ணங்கள் போதுமே ---இதனை
முற்றிலும் உணர்ந்தால் லாபமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக