வியாழன், 11 ஜூலை, 2019

கண்கள் 691

கண்கள்       வழியே       நுழைவது    ---பின்பு
காதல்       என்று      மலர்வது
பெண்ணை     ஆணை     இணைப்பது    ---பிறர்
பேசுகின்ற      இனிய       பொருளது

இருவர்       மனங்களை     சேர்ப்பது    ---இது
இரவினைப்     பகலென    காண்பது
ஒருவரை     மட்டும்     நினைப்பது     ---இந்த
உலகில்       என்றும்      வாழ்வது
 
கூடியே       வாழ்ந்திட     வைப்பது    ---பலரின்
குடும்பங்கள்      எரிமலை     ஆவது
ஓடிக்      களைத்து     உழல்வது    ---சிலர்
உயிர்கள்     மண்ணில்     மறைவது

இறைவன்       படைத்த     உயிர்களில்    ---என்றும்
ஏற்றத்        தாழ்வுகள்       இல்லையே
வரைமுறை   இல்லா   மனித    வாழ்விலே     ---வீணில்
வன்மம்       பகைமை கள்    தொல்லையே

காதல்       செய்குவீர்      மாந்தரே     ---அதில்
கவனம்      வேண்டும்     வாழ்விலே
மோதல்      எண்ணங்கள்    போதுமே     ---இதனை
முற்றிலும்      உணர்ந்தால்     லாபமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக