நெஞ்சில் உள்ளவர் ---எனோ
நில்லா து எங்கோ சென்றாரே
கொஞ்சும் பூங்கிளி இன்றே ---நீ
கூட்டி வாயேன் என்னிடம்
அன்பைத் தந்தவர் அலட்சியம் செய்ததேன் ---என்
கண்ணில் கலந்தவர் காத தூரம் போனதேன்
உன்னையன்றி இதனை உரைப்பது யாரிடம் ---இங்கே
பெண்மை தவிக்குதே பேதமை சூழ்ந்ததே
சிரிக்கும் அழகிலே என்சித்தம் இழந்தேனே ---கண்
சிந்திடும் முத்துக்கள் அவர் சிந்தையை உருக்காதோ
எரித்திடும் நிலவே எனோ என்னைக் கொல்கிறாய் ---மீண்டும்
என்னவர் வருவாரென ஏங்கி நிற்றல் சரிதானா
இரவா பகலா எனக்கு ஒன்றும் புரியல்லயே ---என்
இருவிழிகள் மூடி எத்தனையோ நாளாச்சு
உறவு கொண்ட உத்தமன் இங்கு ஓடி வரக் கூடாதா ---என்
உள்ளம் நொந்து வாடுதல் உலகில் என்ன நீதியோ
சென்றவர் என்னிடம் திரும்பிட வேண்டும் ---இந்த
சேயிழை கண்களில் தேன்மழை வேண்டும்
கன்றிய என்னுடல் களிப்புற வேண்டும் ---அந்த
காமனின் அருளால் எனது காதல் வெல்ல வேண்டும்
நில்லா து எங்கோ சென்றாரே
கொஞ்சும் பூங்கிளி இன்றே ---நீ
கூட்டி வாயேன் என்னிடம்
அன்பைத் தந்தவர் அலட்சியம் செய்ததேன் ---என்
கண்ணில் கலந்தவர் காத தூரம் போனதேன்
உன்னையன்றி இதனை உரைப்பது யாரிடம் ---இங்கே
பெண்மை தவிக்குதே பேதமை சூழ்ந்ததே
சிரிக்கும் அழகிலே என்சித்தம் இழந்தேனே ---கண்
சிந்திடும் முத்துக்கள் அவர் சிந்தையை உருக்காதோ
எரித்திடும் நிலவே எனோ என்னைக் கொல்கிறாய் ---மீண்டும்
என்னவர் வருவாரென ஏங்கி நிற்றல் சரிதானா
இரவா பகலா எனக்கு ஒன்றும் புரியல்லயே ---என்
இருவிழிகள் மூடி எத்தனையோ நாளாச்சு
உறவு கொண்ட உத்தமன் இங்கு ஓடி வரக் கூடாதா ---என்
உள்ளம் நொந்து வாடுதல் உலகில் என்ன நீதியோ
சென்றவர் என்னிடம் திரும்பிட வேண்டும் ---இந்த
சேயிழை கண்களில் தேன்மழை வேண்டும்
கன்றிய என்னுடல் களிப்புற வேண்டும் ---அந்த
காமனின் அருளால் எனது காதல் வெல்ல வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக