கருவாப் பையன் சிரிக்கிறான் ---அவனுக்கு
காதுகள் சரியாய் கேளாது
ஒருவாய் சோத்துக்காக தினமும் ---அவன்
ஊரினைச் சுற்றித் திரிகிறான்
ஆல மரத்தின் நிழலிலே ---அதன்
அடியில் அமைந்த பொந்தினிலே
கால்களை நீட்டியே தூங்குவான் இரவில்
கர்ஜனை அதிகமாய்ப் போடுவான்
கொடுத்த வேலைகள் செய்குவான் ---பிறர்
கொடுப்பதை வாங்கிக் கொள்ளுவான்
படித்தது எதுவும் கிடையாது ---அவனுக்கோ
பந்தமும் பாசமும் புரியாது
திருவிழா என்றால் கொண்டாட்டம் --பின்பு
தினமும் சோத்துக்கு திண்டாட்டம்
பலநாள் வேலைகள் இருக்காது ---வரும்
பசியும் தூக்கமும் அவன்பாடு
எவ ள் தான் இவனைப் பெற்றாளோ ---எனோ
தெருவினில் போட்டுப் போனாளோ
உலைவாய் சோத்துக்கான கொடுமையிலே ---அன்று
ஓடியே எங்கயோ போனா ளோ
ஈரெட்டான இளம் பருவம் ---அவனுக்கு
என்றைக்கும் இல்லையே தலைக் கருவம்
கார்வெட்கும் மிகவும் நல்ல கரிய நிறம் ---அவனிடம்
கள்ளம் அறிந்திடா வெள்ளை மனம்
காதுகள் சரியாய் கேளாது
ஒருவாய் சோத்துக்காக தினமும் ---அவன்
ஊரினைச் சுற்றித் திரிகிறான்
ஆல மரத்தின் நிழலிலே ---அதன்
அடியில் அமைந்த பொந்தினிலே
கால்களை நீட்டியே தூங்குவான் இரவில்
கர்ஜனை அதிகமாய்ப் போடுவான்
கொடுத்த வேலைகள் செய்குவான் ---பிறர்
கொடுப்பதை வாங்கிக் கொள்ளுவான்
படித்தது எதுவும் கிடையாது ---அவனுக்கோ
பந்தமும் பாசமும் புரியாது
திருவிழா என்றால் கொண்டாட்டம் --பின்பு
தினமும் சோத்துக்கு திண்டாட்டம்
பலநாள் வேலைகள் இருக்காது ---வரும்
பசியும் தூக்கமும் அவன்பாடு
எவ ள் தான் இவனைப் பெற்றாளோ ---எனோ
தெருவினில் போட்டுப் போனாளோ
உலைவாய் சோத்துக்கான கொடுமையிலே ---அன்று
ஓடியே எங்கயோ போனா ளோ
ஈரெட்டான இளம் பருவம் ---அவனுக்கு
என்றைக்கும் இல்லையே தலைக் கருவம்
கார்வெட்கும் மிகவும் நல்ல கரிய நிறம் ---அவனிடம்
கள்ளம் அறிந்திடா வெள்ளை மனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக