புதன், 17 ஜூலை, 2019

வெள்ளை மனம் 7 0 9

கருவாப்        பையன்       சிரிக்கிறான்    ---அவனுக்கு
காதுகள்     சரியாய்      கேளாது
ஒருவாய்      சோத்துக்காக      தினமும்    ---அவன்
ஊரினைச்    சுற்றித்      திரிகிறான்

ஆல       மரத்தின்      நிழலிலே     ---அதன்
அடியில்    அமைந்த    பொந்தினிலே
கால்களை    நீட்டியே   தூங்குவான்  இரவில்
கர்ஜனை     அதிகமாய்ப்     போடுவான்

கொடுத்த      வேலைகள்    செய்குவான்   ---பிறர்
கொடுப்பதை     வாங்கிக்     கொள்ளுவான்
படித்தது       எதுவும்       கிடையாது    ---அவனுக்கோ
பந்தமும்      பாசமும்      புரியாது
திருவிழா    என்றால்    கொண்டாட்டம்   --பின்பு
தினமும்     சோத்துக்கு    திண்டாட்டம்
பலநாள்     வேலைகள்    இருக்காது  ---வரும்
பசியும்    தூக்கமும்      அவன்பாடு
எவ ள்     தான்       இவனைப்     பெற்றாளோ   ---எனோ
தெருவினில்     போட்டுப்     போனாளோ
உலைவாய்     சோத்துக்கான    கொடுமையிலே   ---அன்று
ஓடியே       எங்கயோ      போனா  ளோ
ஈரெட்டான     இளம்      பருவம்    ---அவனுக்கு
என்றைக்கும்     இல்லையே     தலைக் கருவம்
கார்வெட்கும்   மிகவும்    நல்ல     கரிய  நிறம்    ---அவனிடம்
கள்ளம்       அறிந்திடா     வெள்ளை    மனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக