கண்ணின் கருமணியே ---நீ
என்காதலுக்கு ஒரு தோணி
உன்னை அடைவதற்க்கே ---இந்த
உலகில் பிறந்தேனடி
வட்டக் கருவிழியால் ---இவ்
உலகை வாரி அனைத்தாயடி
சுட்டும் விரல் அசைவில் --மனிதர்கள்
சுழன்று திரிவாரடி
எட்டியே நடை நடக்க ---இளையோர்
ஏங்கித் தவிப்பாராடி
பட்டுமேனி அசைவில் ---வந்த
பசியும் தீருமடி
முல்லை மலர் அழகோ ---உன்
மோகனப் பல்வரிசை
கள்ளி நீ சிரிக்க --வீசும்
காற்றும் நடுங்குமடி
தண்டைக் கொலுசு சப்தம் --இன்ப
சங்கீதம் போன்றதடி
உண்டு மகிழ்வதற்கோ ---உலகில்
அந்த உத்தமன் படைத்தானடி --
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக