புதன், 10 ஜூலை, 2019

உத்தமன685

கண்ணின்       கருமணியே    ---நீ
என்காதலுக்கு    ஒரு  தோணி 
உன்னை  அடைவதற்க்கே    ---இந்த 
உலகில்     பிறந்தேனடி 

வட்டக்    கருவிழியால்    ---இவ் 
உலகை      வாரி    அனைத்தாயடி 
சுட்டும்    விரல்    அசைவில்   --மனிதர்கள் 
சுழன்று      திரிவாரடி 
  
எட்டியே     நடை      நடக்க   ---இளையோர் 
ஏங்கித்       தவிப்பாராடி 
பட்டுமேனி     அசைவில்   ---வந்த 
பசியும்        தீருமடி 

முல்லை     மலர்     அழகோ    ---உன் 
மோகனப்     பல்வரிசை 
கள்ளி   நீ     சிரிக்க  --வீசும் 
காற்றும்     நடுங்குமடி 

தண்டைக்     கொலுசு    சப்தம்   --இன்ப 
சங்கீதம்      போன்றதடி 
உண்டு     மகிழ்வதற்கோ    ---உலகில் 
அந்த      உத்தமன்     படைத்தானடி --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக