சித்தர்கள் போற்றும் செல்வியும் நீயே ---எம்
சிந்தையில் வாழும் ஜீவ ஜோதியென் தாயே
உத்தமி நீயே உலகை ஆள்வாயே --உன்
அடி போற்றினோம் அருள் புரிவாயே
சத்திய நெறி வளர் சங்கரி நீயே ---எந்த
சமரிலும் தீமையை வதை புரிவாயே
இத்தரை செழித்திட இறையருள் செய்க ---வாடும்
ஏழையைக் காக்கவே இன்றேனும் வருகவே
மங்கையர் வாழ்வில் மகிழ்ச்சி யே பெறுக ---எம்
மாதா வின் கருணை மக்களை அடைக
திங்களும் வானும் சிறப்புடன் பொலிக ---தேவி
உந்தன் தயவால் இங்கு தேன்மழை பொழிக
இல்லை என்ற சொல் இல்லாது ஒழிக ---இங்கு
ஏற்ற தாழ்வுகள் இனியென்கோ ஒளி க
கள்ள எண்ணங்கள் காற்றினில் மறைக ---நல்
கருணைத் தெய்வமே காத்தருள் புரிக
மாந்தர்கள் யாவரும் மகிழ்வு ற வேண்டும் ---எங்கள்
மனையறம் என்றுமே மணம் பெற வேண்டும்
சொந்தமும் சுற்றமும் சுகம் பெற வேண்டும் ---செம்
தமிழ்ச் செல்வியே உந்தன் சிறப்பினைப் பணிவோம்
சிந்தையில் வாழும் ஜீவ ஜோதியென் தாயே
உத்தமி நீயே உலகை ஆள்வாயே --உன்
அடி போற்றினோம் அருள் புரிவாயே
சத்திய நெறி வளர் சங்கரி நீயே ---எந்த
சமரிலும் தீமையை வதை புரிவாயே
இத்தரை செழித்திட இறையருள் செய்க ---வாடும்
ஏழையைக் காக்கவே இன்றேனும் வருகவே
மங்கையர் வாழ்வில் மகிழ்ச்சி யே பெறுக ---எம்
மாதா வின் கருணை மக்களை அடைக
திங்களும் வானும் சிறப்புடன் பொலிக ---தேவி
உந்தன் தயவால் இங்கு தேன்மழை பொழிக
இல்லை என்ற சொல் இல்லாது ஒழிக ---இங்கு
ஏற்ற தாழ்வுகள் இனியென்கோ ஒளி க
கள்ள எண்ணங்கள் காற்றினில் மறைக ---நல்
கருணைத் தெய்வமே காத்தருள் புரிக
மாந்தர்கள் யாவரும் மகிழ்வு ற வேண்டும் ---எங்கள்
மனையறம் என்றுமே மணம் பெற வேண்டும்
சொந்தமும் சுற்றமும் சுகம் பெற வேண்டும் ---செம்
தமிழ்ச் செல்வியே உந்தன் சிறப்பினைப் பணிவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக