புதன், 10 ஜூலை, 2019

செந்தமிழ்ச் செல்வி 683

சித்தர்கள்     போற்றும்     செல்வியும்      நீயே    ---எம்
சிந்தையில்     வாழும்     ஜீவ  ஜோதியென்    தாயே
உத்தமி     நீயே     உலகை      ஆள்வாயே    --உன்
அடி      போற்றினோம்     அருள்     புரிவாயே

சத்திய    நெறி    வளர்     சங்கரி      நீயே    ---எந்த
சமரிலும்      தீமையை     வதை     புரிவாயே
இத்தரை     செழித்திட     இறையருள்    செய்க    ---வாடும்
ஏழையைக்      காக்கவே     இன்றேனும்   வருகவே

மங்கையர்     வாழ்வில்     மகிழ்ச்சி யே     பெறுக    ---எம்
மாதா வின்     கருணை     மக்களை     அடைக
திங்களும்      வானும்    சிறப்புடன்     பொலிக    ---தேவி
உந்தன்      தயவால்     இங்கு     தேன்மழை     பொழிக

இல்லை   என்ற       சொல்      இல்லாது     ஒழிக   ---இங்கு
ஏற்ற      தாழ்வுகள்    இனியென்கோ      ஒளி க
கள்ள     எண்ணங்கள்    காற்றினில்     மறைக   ---நல்
கருணைத்       தெய்வமே    காத்தருள்      புரிக

மாந்தர்கள்    யாவரும்     மகிழ்வு ற    வேண்டும்    ---எங்கள்
மனையறம்      என்றுமே     மணம்   பெற    வேண்டும்
சொந்தமும்     சுற்றமும்      சுகம்    பெற     வேண்டும்    ---செம்
தமிழ்ச்       செல்வியே   உந்தன்    சிறப்பினைப்    பணிவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக