ஞாயிறு, 21 ஜூலை, 2019

கைதி 7 1 9

தங்கத்தைப்         போன்றவள்    ---நானோ
தனியாகப்        போனவன்
சிங்கமாய்      இருந்தவன்     ----இன்று
சிறுநரி      யானவன்

கண்களால்      கைதானேன்    ---இன்று
கண்ணீரில்     கரைகிறேன்
புண்பட்ட    மனதினால்     ----இங்கு
பொங்கியே     வழிகிறேன்

  என்ன  தவறு     செய்தேன்  நான்   --என்னை 
ஏனடி     நீ       வாட்டினாய்
அன்பினைக்     கேட்டதால்    ---என்னை
அடிமையாய்      நடத்தினாய்

துன்பத்தில்     உழன்றாலும்    ---உன்னிடம்
தூதுகள்        விடவில்லை
என்மனம்      காக்குமே     ---வந்த
இழிநிலை      போக்குமே     

பொறுமையாய்      இருந்திடு     ---நன்கு
புத்தியை       செலவிடு
அருமையான    வாழ்விலே    ---கண்ணே
என்னுடன்     அன்பாக     வாழ்ந்திடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக