ஐயிரண்டு திங்களில் ---என்னை
அன்பாக சுமந்தவள்
மெய்யினைக் காத்தவள் ---உலகில்
மேம்பட வைத்தவள்
சீராட்டிப் பாராட்டினாள் ---நல்ல
சிந்தனை ஊட்டினாள்
பாரோர் மதித்திட ---நல்ல
பண்புகள் தந்தவள்
பாசத்தைப் பொழிந்தவள் ---நீதி
பக்கத்தில் இருந்தவள்
வேஷங்கள் தெரியாது ---அவள்
விலையில்லா தொரு மாது
உள்ளத்தால் உயர்ந்தவள் --அவள்
உழைப்பதில் சிறந்தவள்
கள்ளத்தை மறந்தவள் ---என்
கண்ணீரில் வாழ்பவள்
எந்நாளும் தீருமோ ---அவளிடம்
எனக்குள்ள பிறவி கடன்
பொன்னான இறைவனே ---நீயும்
இந்த பிள்ளையைத் தேற்றுவீர்
கண்ணீரில் வாழ்கிறேன் ---தாயினை
எந்தக் காலமும் நினைக்கிறேன்
விண்ணில் வாழும் என்தாயே ---மீண்டும்
மண்ணில் விரைவாக வந்திடு
அன்பாக சுமந்தவள்
மெய்யினைக் காத்தவள் ---உலகில்
மேம்பட வைத்தவள்
சீராட்டிப் பாராட்டினாள் ---நல்ல
சிந்தனை ஊட்டினாள்
பாரோர் மதித்திட ---நல்ல
பண்புகள் தந்தவள்
பாசத்தைப் பொழிந்தவள் ---நீதி
பக்கத்தில் இருந்தவள்
வேஷங்கள் தெரியாது ---அவள்
விலையில்லா தொரு மாது
உள்ளத்தால் உயர்ந்தவள் --அவள்
உழைப்பதில் சிறந்தவள்
கள்ளத்தை மறந்தவள் ---என்
கண்ணீரில் வாழ்பவள்
எந்நாளும் தீருமோ ---அவளிடம்
எனக்குள்ள பிறவி கடன்
பொன்னான இறைவனே ---நீயும்
இந்த பிள்ளையைத் தேற்றுவீர்
கண்ணீரில் வாழ்கிறேன் ---தாயினை
எந்தக் காலமும் நினைக்கிறேன்
விண்ணில் வாழும் என்தாயே ---மீண்டும்
மண்ணில் விரைவாக வந்திடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக