திங்கள், 15 ஜூலை, 2019

பிள்ளை 7 0 7

ஐயிரண்டு       திங்களில்     ---என்னை
அன்பாக      சுமந்தவள்
மெய்யினைக்    காத்தவள்   ---உலகில்
மேம்பட      வைத்தவள்
சீராட்டிப்   பாராட்டினாள்   ---நல்ல
சிந்தனை     ஊட்டினாள்
பாரோர்      மதித்திட  ---நல்ல
பண்புகள்    தந்தவள்
பாசத்தைப்   பொழிந்தவள்   ---நீதி
பக்கத்தில்    இருந்தவள்
வேஷங்கள்     தெரியாது   ---அவள்
விலையில்லா   தொரு மாது
உள்ளத்தால்   உயர்ந்தவள்   --அவள்
உழைப்பதில்    சிறந்தவள்
கள்ளத்தை       மறந்தவள்   ---என்
கண்ணீரில்     வாழ்பவள்
எந்நாளும்     தீருமோ   ---அவளிடம்
எனக்குள்ள   பிறவி கடன்
பொன்னான   இறைவனே    ---நீயும்
இந்த   பிள்ளையைத் தேற்றுவீர்
கண்ணீரில்     வாழ்கிறேன்   ---தாயினை
எந்தக்    காலமும்   நினைக்கிறேன்
விண்ணில்  வாழும்    என்தாயே  ---மீண்டும்
மண்ணில்    விரைவாக    வந்திடு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக