செவ்வாய், 16 ஜூலை, 2019

இயற்கை 7 0 8

நீல       வான       மேடையில்    ---நன்கு
நீந்திச்        செல்லும்     வெண்ணிலா
கோல        வண்ணப்    பூச்சியே   ---உனக்கு
கொள்ளை    வண்ணம்    கொடுத்ததார் ?
 
ஆழமான      பெருங்       கடலிலே    ---தினம்
அழகாய்       நீந்தும்     மீனினம்
ஓலம்       போடும்      அலைகளே    ---உமக்கு
ஒலிக்க        கற்றுக்     கொடுத்ததார் ?

கரையைத்       தொட்டுத்      திரும்பிடும்   ---உனக்கு
கரிக்கும்      உப்பினைக்     கொடுத்ததார்  ?
ஒதுங்கி       நிற்கும்      நாரைகாள்      ---உமக்கும்
உயர்ந்த      கால்கள்     கொடுத்ததார்  ?

ஆழ்கடலின்     ரொம்ப      ஆழத்தில்   ---நல்ல
அழகு        முத்துக்கள்       கிடைக்குமே
சூழ்ந்து      பலரும்     எடுக்கலாம்    ---நாமும்
சுகமாய்     செல்வங்கள்    சேர்க்கலாம்

இறைவன்      படைக்கும்     பொருள்களில்   ---நமக்கு
எல்லா       வளங்களும்     கிடைக்குமே
இதனை      உணர்ந்து     கொள்ளுவோம்    ---அந்த
இயற்கையை       நினைத்து     வணங்குவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக