நீல வான மேடையில் ---நன்கு
நீந்திச் செல்லும் வெண்ணிலா
கோல வண்ணப் பூச்சியே ---உனக்கு
கொள்ளை வண்ணம் கொடுத்ததார் ?
ஆழமான பெருங் கடலிலே ---தினம்
அழகாய் நீந்தும் மீனினம்
ஓலம் போடும் அலைகளே ---உமக்கு
ஒலிக்க கற்றுக் கொடுத்ததார் ?
கரையைத் தொட்டுத் திரும்பிடும் ---உனக்கு
கரிக்கும் உப்பினைக் கொடுத்ததார் ?
ஒதுங்கி நிற்கும் நாரைகாள் ---உமக்கும்
உயர்ந்த கால்கள் கொடுத்ததார் ?
ஆழ்கடலின் ரொம்ப ஆழத்தில் ---நல்ல
அழகு முத்துக்கள் கிடைக்குமே
சூழ்ந்து பலரும் எடுக்கலாம் ---நாமும்
சுகமாய் செல்வங்கள் சேர்க்கலாம்
இறைவன் படைக்கும் பொருள்களில் ---நமக்கு
எல்லா வளங்களும் கிடைக்குமே
இதனை உணர்ந்து கொள்ளுவோம் ---அந்த
இயற்கையை நினைத்து வணங்குவோம்
நீந்திச் செல்லும் வெண்ணிலா
கோல வண்ணப் பூச்சியே ---உனக்கு
கொள்ளை வண்ணம் கொடுத்ததார் ?
ஆழமான பெருங் கடலிலே ---தினம்
அழகாய் நீந்தும் மீனினம்
ஓலம் போடும் அலைகளே ---உமக்கு
ஒலிக்க கற்றுக் கொடுத்ததார் ?
கரையைத் தொட்டுத் திரும்பிடும் ---உனக்கு
கரிக்கும் உப்பினைக் கொடுத்ததார் ?
ஒதுங்கி நிற்கும் நாரைகாள் ---உமக்கும்
உயர்ந்த கால்கள் கொடுத்ததார் ?
ஆழ்கடலின் ரொம்ப ஆழத்தில் ---நல்ல
அழகு முத்துக்கள் கிடைக்குமே
சூழ்ந்து பலரும் எடுக்கலாம் ---நாமும்
சுகமாய் செல்வங்கள் சேர்க்கலாம்
இறைவன் படைக்கும் பொருள்களில் ---நமக்கு
எல்லா வளங்களும் கிடைக்குமே
இதனை உணர்ந்து கொள்ளுவோம் ---அந்த
இயற்கையை நினைத்து வணங்குவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக